எச்சரிக்கை.. அடுத்த மாதம் நாட்டில் கொரோனா 3ஆம் அலை.. அடித்துச் சொல்லும் எஸ்பிஐ வல்லுநர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா 2ஆம் அலையிலிருந்து இந்தியா மீண்டு சில மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், கொரோனா 3ஆம் அலை அடுத்த மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக எஸ்பிஐ வல்லுநர் குழு கணித்துள்ளது.

Recommended Video

    India-வில் Coronavirus 3rd Wave அடுத்த மாதம் ஏற்படலாம்.. SBI வல்லுநர் குழு எச்சரிக்கை

    இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் கடந்த சில மாதங்களாகவே மிக மோசமாக இருந்தது. தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சத்தைத் தாண்டியது.

    இந்த காலகட்டத்தில் மத்திய அரசு எந்தவொரு ஊரடங்கையும் அமல்படுத்தவில்லை என்றாலும், நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களும் எதோ ஒரு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    கொரோனா இரண்டாம் அலை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி வைரஸ் பாதிப்பு 40 ஆயிரமாகக் குறைந்துள்ளது. ஆனால், அதற்குள் கொரோனா 3ஆம் அலை பற்றிப் பரவும் தகவல்கள் கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாட்டில் ஏற்படும் கொரோனா 3ஆம் அலை குறித்து பல்வேறு ஆய்வாளர்களும் தங்கள் கணிப்புகளைக் கூறி வருகின்றனர்.

    எஸ்பிஐ வல்லுநர் குழு

    எஸ்பிஐ வல்லுநர் குழு

    இந்நிலையில், நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ 'Covid-19: The race to finishing line' என்ற தலைப்பில் கொரோனா 3ஆம் அலை பற்றிய ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் கொரோனா 3ஆம் அலை அடுத்த மாதம் நாட்டில் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த அலை வரும் செப்டம்பர் மாதம் உச்சமடையும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    அடுத்த மாதம் கொரோனா 3ஆம் அலை

    அடுத்த மாதம் கொரோனா 3ஆம் அலை

    எஸ்பிஐ அளித்த அறிக்கையின்படி, "நாட்டில் கொரோனா 2ஆம் அலை ஏப்ரல் மாதம் தொடங்கி, மே 7ஆம் தேதி உச்சமடைந்தது. இதனால் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் நாட்டில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நமக்கு தற்போதுள்ள தரவுகளை வைத்துப் பார்த்தால் ஜூலை மாதம் தினசரி பாதிப்பு 10 ஆயிரமாக இருக்கும். ஆனால் இது ஆகஸ்ட் மாதம் அதிகரிக்கத் தொடங்கும். செப்டம்பரில் உச்சமடையும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    வேக்சின் பணிகள்

    வேக்சின் பணிகள்

    இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், இதைப் பயன்படுத்தி வேக்சின் பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், வேக்சின் பற்றாக்குறை இன்னும் தீரவில்லை. இதனால் தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வேக்சின் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+