Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துறவி, புரோகிதர், பூசாரிகளுக்கு நலவாரியம்! உதவித்தொகை வழங்க முடிவு! உபி அரசு பரபர அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் துறவிகள், புரோகிதர்கள், பூசாரிகளுக்காக நலவாரியம் அமைக்கப்படுவதுடன், வயது முதிர்ந்த துறவி, புரோகிதர், பூசாரிகளுக்கு உதவித்தொகையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முடிவு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாஜக அமோக வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதன்மூலம் 2வது முறையாக யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியேற்றார்.

இதையடுத்து தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் அவர் நிறைவேற்றி வருகிறார். இத்திட்டங்கள் அமைச்சரவை ஒப்புதல் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

நலவாரியம் - உதவித்தொகை

நலவாரியம் - உதவித்தொகை

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி தற்போது உத்தர பிரதேசத்தில் துறவிகள், புரோகிதர்கள், பூசாரிகளுக்கு நலவாரியம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நலவாரியம் சார்பில் வயது முதிர்ந்த நிலையில் மடங்களில் வாழும் துறவிகள், புரோகிதர்கள், கோயில் பூசாிரிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அத்துடன் புரோகிதர் மற்றும் கோயில்களின் பூசாரிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படுவதுடன் பிற சலுகைகளும் வழங்கப்பட உள்ளது.

சுற்றுலா மேம்பாடு

சுற்றுலா மேம்பாடு

ஆன்மிகம் சார்ந்த பஜனை, கீர்த்தனைகளுக்காக உத்தர பிரதேசத்தில் உள்ள தெய்வீக நகரங்களான மதுரா, வாரணாசி, அயோத்தியா மற்றும் கோரக்பூரில் பயிற்சி நிலையங்களும் நிறுவ முடிவு செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகளை கவர ராமாயணம், மகாபாரதம், சூபி, பவுத்தம் மற்றும் சுதந்திர போராட்டங்கள் சார்ந்த 12 வகை சுற்றுலா தலங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 75 மாவட்டங்களில் சுற்றுச்சூழல் கிராம சுற்றுலா பிரிவுகளும் புதிதாக உருவக்கப்பட உள்ளன. மேலும் மதுராவிலிருந்து பர்ஸானா, பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமம் மற்றும் ஜான்சி கோட்டையில் ரோப்கார் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் கோயில்களின் வரலாறு, ஆன்மிக நாட்குறிப்புகள் உள்ளிட்டவைகளுடன் சுற்றுலா இணையதளமும் உருவாக்கப்பட உள்ளன.

மொழி அகாடமி

மொழி அகாடமி


இதுதவிர உத்தர பிரதேசத்தில் இந்தி, உருது, போஜ்புரி, அவதி, கடிபோலி உள்ளிட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இந்த மொழிகளை வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மொழி அகாடமி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ, லக்கிம்பூர் கெரி மற்றும் சோன்பத்ராவில் பழங்குடிகளுக்கான அருங்காட்சியகமும் புதிதாக அமைக்கப்பட உள்ளன. இத்துடன் மாநிலம் உருவானதை நினைவுகூறும் வகையில் உத்தரப் பிரதேச நாள்' ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒலிபெருக்கி பிரச்சனை

ஒலிபெருக்கி பிரச்சனை

இதுதவிர மதகலவரங்களை தடுக்கும் வகையில் மதம் சார்ந்த ஊர்வலங்களுக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் மக்களுக்கு இடையூறு ஏற்படாது. ஏற்பட்டால் முழுபொறுப்பு ஏற்பதாக எழுதி வாங்கிய பின்தான் அனுமதி கொடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மேலும் கலவரம், வன்முறையில் பொதுசொத்துகள் சேதப்படுத்தப்பட்டால் அதன் நிர்வககளிடம் இழப்பீடு பெறவும் விதிகள் மாற்றம் செய்யப்பட உள்ளது. மேலும் மாநிலம் முழுவதிலும் மசூதி, கோயில் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள ஒலிப்பெருக்கிகளையும், அதன் ஒலி அளவையும் கணக்கீட உத்தரவிடப்பட்டது. மேலும் புதிதாக ஒலிபெருக்கி அமைக்க தடை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+