வெளிநாடுகளிலிருந்து வேக்சின் வாங்க முடிவு.. சோதனை நிலையில் மேலும் 3 தடுப்பூசிகள்.. பிரதமர் பேச்சு!
டெல்லி: தடுப்பூசி சப்ளையை அதிகரிக்க, வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை வாங்க உள்ளோம், வெளிநாட்டிலிருந்து தடுப்பூசி வாங்குவதற்கான செயல்முறை துரிதப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் 3 தடுப்பூசிகள் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளன, என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலை மத்திய அரசு எதிர்கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. முக்கியமாக வேக்சின் ஆர்டர் செய்வதிலும், அதை மாநில அரசுகளுக்கு ஒதுக்குவதிலும் தோல்வி அடைந்துவிட்டதாக மத்திய அரசு மீது புகார் வைக்கப்பட்டு வருகின்றது. உச்ச நீதிமன்றமே மத்திய அரசின் வேக்சின் கொள்கையை கடுமையாக விமர்சனம் செய்தது.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மக்கள் முன்னிலையில் கொரோனா பரவல் குறித்தும், வேக்சின் குறித்தும் பேசினார். மக்களுக்கு வேக்சின் போடுவதன் முக்கியத்துவத்தையும், இதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.

வேக்சின்
வேக்சின் குறித்து பிரதமர் மோடி தனது பேச்சில், இந்தியா கடந்த 100 வருடங்களில் கண்டறியாத பேரிடர் கொரோனா. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மக்களின் உயிரை காப்பாற்றியுள்ளன. ஆரம்பத்தில் தடுப்பூசி போடும் வேகம் குறைவாக இருந்தது தற்போது இந்த வேகம் அதிகரித்துள்ளது.

தடுப்பூசி
தடுப்பூசி மட்டும் தான் இந்த அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்றும். கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே பேராயுதம். நவீன உலகம் கொரோனாவை போன்று ஒரு பெருந்தொற்றை கண்டதே இல்லை. இந்தியாவிலேயே இரண்டு வேக்சின் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்தியா போராட்டம்
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா முன்களத்தில் நின்று போராடி வருகிறது. கொரோனாவைத் தொடர்ந்து புதிய சுகாதார கட்டமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் வேக்சின் அனுமதிக்கப்பட்டால் நமது வேக்சின் போடும் வேகம் இன்னும் அதிகரிக்கும்.

சொட்டு மருந்து
மூக்கில் சொட்டு மருந்தாக செலுத்தும் வகையிலான தடுப்பூசி விரைவில் வரும். மேலும் 3 தடுப்பூசிகள் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளன. தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் மொத்தம் 7 கம்பெனிகள் வேக்சின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. குழந்தைகளிடம் வேக்சின் சோதனை செய்வதும் தொடங்கி உள்ளது.

முடிவு
குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இரண்டு தடுப்பூசிகளின் டிரையல் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை விரைவில் முடிவிற்கு வரும். தடுப்பூசி சப்ளையை அதிகரிக்க, வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை வாங்க உள்ளோம். வெளிநாட்டிலிருந்து தடுப்பூசி வாங்குவதற்கான செயல்முறை துரிதப்படுத்தப்பட்டுள்ளது, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications