'2047-க்குள் புதிய இந்தியாவை உருவாக்க இலக்கு'.. நேதாஜி சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி சூளுரை!
டெல்லி: 2047-க்குள் புதிய இந்தியாவை உருவாக்க இலக்கு வைத்துள்ளோம் என்று நேதாஜி சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார். தலைநகர் டெல்லியில் முப்பரிமாண ஒளி வடிவ நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்
ஆங்கிலேயர்களுக்கு எதிராக துணிச்சலுடன் போராடி தேசத்தின் விடுதலைக்கு மிக முக்கிய பங்காற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். முதன் முதலாக இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

முப்பரிமாண மின் ஒளி சிலை
டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு கிரானைட் கல்லால் ஆன பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி நேதாஜியின் பிறந்த நாளான இன்று டெல்லி இந்தியா கேட் பகுதியில் 'ஹாலோகிராம்' எனப்படும் முப்பரிமாண மின் ஒளி வடிவிலான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்தவர்
நேதாஜியின் பிரம்மாண்ட கிராணைட் சிலை இந்தியா கேட்டில் நிறுவப்படும் வரை முப்பரிமாண மின் ஒளி வடிவிலான நேதாஜி சிலை இந்தியா கேட்டில் மிளிரும். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, நேதாஜிக்கு புகழாரம் சூட்டினார். பல்வேறு சோதனைகளை சந்தித்த போதும் ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்தவர் நேதாஜி என்று கூறிய பிரதமர் மோடி இந்தியர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்து சுதந்திர போராட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பை நேதாஜி என்று கூறினார்.

நம்பிக்கை இழக்காதீர்கள்
விரைவில் நேதாஜியின் ஹாலோகிராம் சிலைக்கு பதிலாக பிரமாண்ட கிரானைட் சிலை அமைக்கப்படும் என்று கூறிய மோடி, நேதாஜியின் சிலை ஜனநாயக விழுமியங்களையும் எதிர்கால சந்ததியினரையும் ஊக்குவிக்கும் என்று பெருமையுடன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர், ' சுதந்திர இந்தியா கனவில் நம்பிக்கை இழக்காதீர்கள், இந்தியாவை அசைக்கக்கூடிய சக்தி உலகில் இல்லை" என்று நேதாஜி கூறுவார்.

புதிய இந்தியாவை உருவாக்க இலக்கு
சுதந்திர இந்தியாவின் கனவுகளை நனவாக்கும் இலக்கை இன்று நாம் கொண்டுள்ளோம். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆவதற்குள், அதாவது 2047-ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க இலக்கு வைத்துள்ளோம் என்றும் கூறினார். ''நாட்டில் சீர்திருத்தம் மற்றும் நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். NDRFஐ நவீனப்படுத்தி, நாடு முழுவதும் விரிவுபடுத்தினோம். திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்கு விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் பிற சிறந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன' என்றும் பிரதமர் கூறினார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications