பாஜகவை விரட்டி நாட்டை முன்னேற்றுவோம்.. சோனியாவை சந்தித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சூளுரை
டெல்லி:‛‛நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்றிணைந்து செயல்படுவது பற்றி சோனியா காந்தியுடன் பேசினோம்'' என சோனியா காந்தி உடனான சந்திப்புக்கு பிறகு பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் கூறினார்.
இந்தியாவில் 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் பீகாரில் பாஜகவை கழற்றிவிட்டு லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சியுடன் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிதிஷ் குமார் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார்.

சோனியாவுடன் சந்திப்பு
இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கு நிதிஷ் குமார் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனை அவர் மறுத்துள்ளார். இருப்பினும் பாஜகவுக்கு எதிராக வலுவான அணி அமைக்க அவர் முடிவு செய்துள்ளார். இதுஒருபுறம் இருக்க பீகாரில் கூட்டணி ஆட்சி அமைந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் டெல்லியில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு என்பது சுமார் ஒரு மணிநேரம் வரை நடந்தது.

பாஜகவுக்கு எதிராக வியூகம்
இந்த சந்திப்பின்போது 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக செயல்படுவது தொடர்பான வியூகம் பற்றி விவாதித்ததாக சொல்லப்படுகிறது. இதுதவிர 2024ம் ஆண்டில் பாஜகவுக்கான எதிரான கொள்கையில் உள்ள கட்சிகளை ஓரணியில் திரட்டுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மூன்று பேரும் கருத்து பரிமாற்றம் செய்துள்ளனர்.

கைகளை உயர்த்தியபடி வந்த தலைவர்கள்
இந்த சந்திப்புக்கு பிறகு சோனியா காந்தியின் வீட்டில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் வெளியே வந்தனர். இருவரும் கைகள் கோர்த்து தலைக்கு மேலே உயர்த்தி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அதன்பிறகு நிதிஷ் குமார் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நிதிஷ் குமார் கூறியது என்ன?
நாங்கள் இருவரும் சோனியா காந்தியை சந்தித்து பேசினோம். நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்றிணைந்து செயல்படுவது பற்றி சோனியா காந்தியுடன் பேசினோம். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு பிறகு இந்த சந்திப்பு குறித்து சோனியா காந்தி விரிவாக பேச உள்ளார்'' என நிதிஷ் குமார் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications