4-ஆம் தொழில்புரட்சிக்கு உலக அளவில் 5 புதிய மையங்கள்.. இந்தியாவில் எங்கே அமைகிறது தெரியுமா?
டெல்லி: உலக பொருளாதார மன்றம் 4-ஆம் தொழில்புரட்சிக்காக 5 புதிய மையங்களை அமைக்க உள்ளது. இதில் ஒன்று ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் அமைய உள்ளது. நடைமுறைக்கு ஏற்ற கொள்கைகள், விதிமுறைகள், பிராந்தியங்களுக்கு முன்னுரிமை, மேம்பட்ட சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை கொண்டு வரும் நோக்கில் இந்த மையங்கள் செயல்படும் என உலக பொருளாதார கூட்டமைப்பின் தலைவர் போர்ஜ் பிரண்டே கூறியுள்ளார்.
4-வது தொழில் புரட்சிக்காக 5 புதிய மையங்களை நிறுவ உலக பொருளாதார மன்றம் (WEF) திட்டமிட்டுள்ளது. இதில் ஒரு மையம் இந்தியாவில் அமைகிறது. இந்தியாவில் ஏற்கனவே இதுபோன்ற இருமையங்கள் உள்ளன. மும்பை மற்றும் தெலுங்கானாவில் தலா ஒரு மையங்கள் உள்ள நிலையில், தற்போது ஆந்திராவில் ஒரு மையம் அமைய இருக்கிறது.

மற்ற மையங்கள் பிரான்ஸ், பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அமைகின்றன. இது குறித்து உலக பொருளாதார கூட்டமைப்பின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி போர்ஜ் பிரண்டே கூறும் போது, "வளர்ந்து வரும் தொழில் நுட்ப சவால்களுக்கு தீர்வு காண்பதில் அரசு மற்றும் தொழில்துறை, நிபுணர்களை ஒருங்கிணைக்கும் விதமாக 4 ஆம் தொழில் புரட்சிக்கான 5 புதிய மையங்கள் தொடங்கப்படும்.
நான்காம் தொழில்துறை புரட்சி நெட்வொர்க் என்பது பல தரப்பினரின் ஒத்துழைப்பிற்கான ஒரு தளமாகும். இது பொது மற்றும் தனியார் துறைகளை ஒன்றிணைத்து, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சமூகத்திற்குப் பலன்களை வழங்குவதையும், அதே நேரத்தில் அபாயங்களைக் குறைப்பதையும் உறுதிசெய்யும் நோக்கில் கொண்டு வரப்படுகிறது.
நடைமுறைக்கு ஏற்ற கொள்கைகள், விதிமுறைகள், பிராந்தியங்களுக்கு முன்னுரிமை, மேம்பட்ட சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை கொண்டு வரும் நோக்கில் இந்த மையங்கள் செயல்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் அமைய இருக்கும் இந்த புதிய மையம் தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:- "உலகம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள இடங்களில் திறனை வளர்ப்பதற்கான நமது உறுதிப்பாட்டை உலக வர்த்தக மன்றத்துடனான இந்த கூட்டாண்மை பிரதிபலிக்கிறது" என்றார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications