அட.. நீங்க என்ன பீட்சா டெலிவரியா பண்ணுறீங்க? மத்திய அரசை நச்சென்று கலாய்த்த டெரிக் ஓ பிரையன்!
மத்திய பாஜக அரசு பீட்சா டெலிவரி செய்வது போல வேகமாக தினமும் மசோதாக்களை தாக்கல் செய்து வருகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் கிண்டல் செய்துள்ளார்.
டெல்லி: மத்திய பாஜக அரசு பீட்சா டெலிவரி செய்வது போல வேகமாக தினமும் மசோதாக்களை தாக்கல் செய்து வருகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் எம்பி டெரிக் ஓ பிரையன் கிண்டல் செய்துள்ளார்.
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இரண்டாவது முறை பதவி ஏற்றத்தில் இருந்தே லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் மசோதாக்களை நிறைவேற்றுவதில் வேகம் காட்டி வருகிறது. சில முக்கிய மாநில கட்சிகளுடன் இணக்கம் இருக்கும் போதே வேகமாக மசோதாக்களை தாக்கல் செய்து அதை நிறைவேற்ற மத்திய அரசு முயன்று வருகிறது.

தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா, தனி நபர்களை தீவிரவாதிகளாக உபா சட்டத்திருத்த மசோதா, நதி நீர் தீர்ப்பாய மசோதா, தேசிய மருத்துவ ஆணைய மசோதா முத்தலாக் தடை சட்ட மசோதா என்று மிக மிக முக்கியமான சர்ச்சைக்கு உரிய மசோதாக்களும் வரிசையாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இதில் மிக முக்கியமாக முத்தலாக் தடை சட்ட மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. இந்த நிலையில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் எம்பி டெரிக் ஓ பிரையன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், மத்திய அரசு ஏன் மசோதாக்களை இவ்வளவு வேகமாக தாக்கல் செய்து வருகிறது. அவர்கள் என்ன பீட்சா டெலிவரியா செய்கிறார்கள். மூன்று நாட்களில் மூன்று முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்துள்ளனர். ஏன் இந்த வேகம்.
மசோதாக்கள் என்பதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதை குறித்து ஆராய வேண்டும். எல்லோரும் விவாதிக்க வேண்டும். அப்போதுதான் சரியாக நிறைவேற்ற முடியும். ஆனால் பாஜக மிக வேகமாக மசோதாக்களை பீட்ஸா டெலிவரி செய்வது போல தாக்கல் செய்கிறது, என்றுள்ளார்.
#Parliament is supposed to scrutinize Bills. This chart explains the bulldozing this Session. Are we delivering pizzas or passing legislation? #ConstructiveOpposition pic.twitter.com/DKPDygpoV5
— Derek O'Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) July 31, 2019
அதேபோல் இவர் செய்துள்ள டிவிட்டில் 2004-2009ல் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களில் 60% மசோதாக்கள் ஆராயப்பட்டது. 2009-2014ல் 71% மசோதாக்கள் ஆராயப்பட்டது. ஆனால் 2014-2019ல் 26% மசோதாக்கள் ஆராய பட்டது. இப்போது அதுவும் குறைந்து 5% மசோதாக்கள் மட்டும் ஆராயப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, வருத்தம் அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications