பாக். டீ எப்படியிருந்துச்சு.. விசாரித்த மனைவி.. நீ போடுவதை விட சூப்பர்.. கலாய்த்த அபிநந்தன்!
Recommended Video

டெல்லி: பாகிஸ்தான் பிடியில் இருந்த அபிநந்தனுக்கு அவருடைய மனைவியுடன் செல்போனில் பேச வாய்ப்பு கிடைத்தபோது மனைவி போடும் டீயை விட பாகிஸ்தானியர்கள் கொடுத்த டீ நன்றாக இருந்ததாக அபிநந்தன் கூறியுள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானப் படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமான படை புறமுதுகிட்டு ஓடச் செய்தது.
அந்த சமயம் பாகிஸ்தான் விமான படை சுட்டதில் தப்பிப்பதற்காக பாராசூட் மூலம் இந்தியாவின் விங் கமாண்டர் அபிநந்தன் குதித்த போது துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் எல்லையில் விழுந்தார். அப்போது அபிநந்தன் பாகிஸ்தான் உளவு அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்டார்.

அபிநந்தன் மனைவி
பாகிஸ்தான் காவலர் ஒருவர் அபிநந்தனின் மார்பில் குத்தி, கன்னத்தில் அறைந்துள்ளார். மற்றொரு காவலர் உங்கள் மனைவியுடன் பேசி கொள்ளுங்கள் என செல்போனை கொடுத்துள்ளார். சவூதி அரேபியா மூலம் அபிநந்தனின் மனைவிக்கு போன் வந்தது. இதனால் பேசுவது அபிநந்தன் தானா என்ற சந்தேகம் மனைவி தன்விக்கு இருந்தது.

குழந்தைகளுக்கு என்ன சொல்வது
ஒரு வேளை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வேலையாக இருக்குமோ என நினைத்த தன்வி அந்த போன் காலை ரெக்கார்ட் செய்தார். பின்னர் பேசுவது அபிநந்தன்தான் என தெரியவந்ததும் தன்வி பேச தொடங்கினார். முதலில் எப்போதும் போல் எங்கே இருக்கிறீர்கள், எப்படி இருக்கிறீர்கள் என்ற கேள்விகளை கேட்ட பிறகு நீங்கள் எங்கே என கேட்டால் குழந்தைகளுக்கு நான் என்ன சொல்வது என கேட்டுள்ளார் தன்வி.

நகைச்சுவை
இதனிடையே அபிநந்தன் டீ குடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பாகிஸ்தான் வெளியிட்டது. இதை பார்த்து விட்டு தன்வி மிகவும் நகைச்சுவையாக அபிநந்தனிடம் பேசியுள்ளார். அந்த உரையாடல் பின்வருமாறு:

எப்படியிருந்தது?
தன்வி: டீ எப்படி இருந்தது
அபிநந்தன்: நன்றாக இருந்தது.
தன்வி: நான் போடும் டீயை விடவா நன்றாக இருந்தது
அபிநந்தன்: ஆமாம், நீ போடுவதைவிட நன்றாக இருந்தது.
தன்வி: அப்போ, அந்த சுவையான டீயை எப்படி போடுவது என்பது குறித்த குறிப்புகளை கேட்டு வாருங்கள் என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications