ஜூன் 1ல் ஜோராகத் தொடங்கப்போகும் தென்மேற்குப் பருவமழை... அனுபவிக்கத் தயாராகுங்கள் மக்களே!
தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு ஜூன் 1 முதல் ஆரம்பிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு ஜூன் 1 முதல் ஆரம்பிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பருவமழை தற்போது இலங்கை மற்றும் கேரளாவை நோக்கி முன்னேறுவதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் தென் மாநிலங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் அதிக மழை பெய்யும். அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்படும். இந்திய வானிலை ஆய்வு மையம் இதனை கணித்து தென்மேற்கு பருவமழை தொடங்குவதை அறிவிக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அந்தமான் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரிந்தன.
இதையடுத்து வருகிற 27ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

தென்மேற்குப் பருவமழை
அடுத்த 48 மணி நேரத்தில் தென் அரேபியக் கடலின் சில பகுதிகள், மாலத்தீவுகள், லட்சத்தீவு மற்றும் கொமோரின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்னேறுவதற்கு சாதகமான சூழ்நிலைகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தென்மேற்குப் பருவமழை வியாழன் அன்று தென் இலங்கையை உள்ளடக்கிய கேரளாவின் சில பகுதிகளை நோக்கி நீடிக்கத் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

கேரளாவில் பருவமழை
இது குறித்த அறிக்கைகளின்படி, கேரளாவின் சில பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த இரண்டு நாட்களில் தென் மாநிலம் மற்றும் லட்சத்தீவுகளில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. கேரளாவில் பருவமழையின் முன்னேற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1 மழை தொடங்க வாய்ப்பு
இதற்கிடையில் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை மே 27ம் தேதி தொடங்கும் என்று வானிலை மையம் முன்பு தெரிவித்திருந்தது. ஆனால் இப்போது தென்மேற்குப் பருவமழை கேரளாவில் ஜூன் 1 முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவின் வடமேற்கு பகுதிகள் வறண்டு கடுமையான வெப்ப அலைகளின் பிடியில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தென் இந்தியாவில் மழை அளவு
அதே வேளையில் தென் தீபகற்பத்தில் அதிக மழை பெய்து வருவதால் மார்ச் 1 முதல் இந்தியாவில் 3 சதவீதம் அதிக மழை பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் மார்ச் 1 முதல் வடமேற்கு இந்தியாவில் 65 சதவீதமும், மத்திய இந்தியாவில் 39 சதவீதமும் மழைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதே போல கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் 27 சதவீதம் அதிக மழையும், தென் தீபகற்பத்தில் 76 சதவீதம் அதிக மழையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அருவிகளில் பெருக்கெடுக்கும் வெள்ளம்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டால் தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளிலும் வெள்ளமென கொட்டும். சீசனை அனுபவிக்க பல்லாயிரக்கணக்கான பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுப்பார்கள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications