தக்காளி விலை எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் - மத்திய அரசு சொன்ன நல்ல செய்தி

டிசம்பர் மாதம் தக்காளி விலை, கடந்த ஆண்டு இருந்த விலைக்கு வந்து விடும் என மத்திய அரசு கூறியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டிசம்பர் மாதம் பிறந்த பின்னர் வடமாநிலங்களில் இருந்து தக்காளி வரத் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சந்தையில் தக்காளி தாராளமாக கிடைக்கும் என்பதால் அதன் விலை குறையத் தொடங்கும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது அக்டோபர் வரை பருவமழை நீடித்தது. அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

வட இந்தியாவின் பல பகுதிகளில் தென்மேற்குப் பருவமழையால் வெள்ளம் பெருக்கெடுத்தது. விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் தற்போது பெய்து வரும் மழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தக்காளி விலை

தக்காளி விலை

கனமழை காரணமாக நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆப்பிளுக்கு நிகராக தக்காளி விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கடைகளில் பிரியாணியை விட தக்காளி சாதம் விலை உயர்ந்தது.

நாடு முழுவதும் தக்காளி விலை

நாடு முழுவதும் தக்காளி விலை

சந்தைக்கு தக்காளி வரத்து படிப்படியாக விலை குறைந்தது. இன்றைய தினம் தக்காளி ஒரு கிலோ 40 ரூபாயாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் விலை குறைந்தபோதிலும், டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம் என பல பகுதிகளில் விலை அதிகமாகவே உள்ளது.

மழையால் பாதிப்பு

மழையால் பாதிப்பு

தக்காளி விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியானா, இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெய்த மழையால் தக்காளி செடிகள் அழுகியதே இதற்கு காரணம் என மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

63 சதவிகிதம் அதிகம்

63 சதவிகிதம் அதிகம்

வட மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து தாமதமானது மட்டுமின்றி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பருவமழை தொடங்கியதால் தக்காளி விலை அதிகரித்து விட்டது. அகில இந்திய சராசரி விலை கிலோவுக்கு ரூ.67 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 63 சதவிகிதம் அதிகம் ஆகும். தக்காளி விலை எப்போது குறையும் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

எப்போது விலை குறையும்

எப்போது விலை குறையும்

டிசம்பர் மாதத்தில் இருந்து வடமாநிலங்களில் இருந்து தக்காளி வரத் தொடங்கும் எனவும் இதனால் தக்காளி சந்தைகளில் தாராளமாக கிடைக்கும் என்பதால் அதன் விலை குறையத் தொடங்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதம் தக்காளி விலை, கடந்த ஆண்டு இருந்த விலைக்கு வந்து விடும். அதே சமயத்தில், வெங்காயத்தின் விலை, கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் இருந்த விலையை விட குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+