இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? மோடிக்கு 24% ஆதரவு.. ஆதித்யநாத் 2ம் இடம்.. மூட் ஆப் தி நேஷன் சர்வே!
டெல்லி: இந்தியாவின் அடுத்த பிரதமராக பதவி ஏற்க நரேந்திர மோடியே தகுதியானவர் என்று இந்தியா டுடே மூட் ஆப் தி நேஷன் சர்வேயில் 24% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்த பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் பட்டியலில் உ.பி முதல்வர் ஆதித்யநாத் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
இந்தியா டுடே மூட் ஆப் தி நேஷன் சர்வே இன்று வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட மாதங்கள் இடைவெளியால் இந்தியா டுடே செய்தி நிறுவனம் மூட் ஆப் தி நேஷன் சர்வேவை வெளியிடுவது வழக்கம். தேசிய அளவில் மத்திய ஆளும் கட்சிக்கும், பிரதமருக்கு இருக்கும் மக்கள் ஆதரவு, மாநில முதல்வர்களின் செயல்பாடு என்று பல விஷயங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு இந்த சர்வே வெளியிடப்படும்.
அதேபோல் மக்கள் மத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய பிரச்சனைகள், களநிலவரம் குறித்து பல்வேறு தகவல்கள் இந்த சர்வேயில் இடம்பெறும்.

சர்வே
இந்த நிலையில் இன்று வெளியான இந்தியா டுடே மூட் ஆப் தி நேஷன் சர்வேயில், இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியே தகுதியானவர் என்று 24% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த மூட் ஆப் தி நேஷன் சர்வேயில் 66% மக்கள் மோடிக்கு ஆதரவு அளித்த நிலையில் இந்த முறை சரிந்துள்ளது. கடந்த வருடம் ஆகஸ்டில் பிரதமர் மோடிக்கான ஆதரவு 66 சதவிகிதமாக இருந்தது.

ஜனவரி
கடந்த ஜனவரியில் இது 38 சதவிகிதமாக குறைந்தது. தற்போது மேலும் சரிந்துள்ளது. அடுத்த பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் பட்டியலில் உ.பி முதல்வர் ஆதித்யநாத் இரண்டாம் இடம் பிடித்தார். பிரதமர் பதவிக்கு உ.பி முதல்வர் ஆதித்யநாத் தகுதியானவர்: 11% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்திதான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று 10% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கம்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று 8% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதேபோல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று 8% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று 7% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் இடைக்கால தலைவர்
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திதான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று 4% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று 4% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆதித்யநாத்
இந்த கருத்து கணிப்பில் மோடிக்கு அடுத்து யோகி ஆதித்யநாத் இடம்பெற்று இருக்கிறார். ஆனால் அதே சமயம் மோடிக்கு அடுத்து பாஜக கட்சிக்குள் சிறந்த பிரதமர் வேட்பாளர் என்ற கேள்விக்கு அமித் ஷாவிற்கு 23 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். இவர் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். யோகி ஆதித்யாநாத்திற்கு 19 சதவிகிதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். ராஜ்நாத் சிங்கிற்கு 11 பேர் சதவிகிதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications