Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாம்பழம்.. ராகுல் உள்பட 7 எம்பிக்களுக்கு போன பார்சல்! பாகிஸ்தான் தூதரகம் அனுப்பியது ஏன்? சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தான் தூதரகம் சார்பில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட 7 பேருக்கு அட்டைப்பெட்டி பார்சலில் திடீரென்று மாம்பழம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக எம்பிக்கள் ஒருவர் கூட இல்லாத நிலையில் அதன் பின்னணியில் உள்ள சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு மற்றும் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் வயநாடு எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்த நிலையில் ரேபரேலி தொகுதி எம்பியாக உள்ளார்.

Rahul Gandhi Mango Pakistan High commission

இதன்மூலம் லோக்சபாவில் காங்கிரஸ் எம்பிக்களின் எண்ணிக்கை என்பது 98 ஆக உள்ளது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் பதவி காங்கிரஸை கைப்பற்றி உள்ளது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் டெல்லியில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகம் சார்பில் ராகுல் காந்தி உள்பட 7 எம்பிக்களுக்கு அட்டைபெட்டி நிறைய மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசிதரூர், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த உத்தர பிரதேச மாநிலம் ராம்புர் எம்பி மொஹிபுல்லா நட்வி, சாம்பல் தொகுதி எம்பி ஜியா உர் ரஹ்மான் பர்க், கைரானா தொகுதியின் பெண் எம்பியான ஹை சவுத்ரி என்ற இக்ரா ஹாசன், காசிப்பூர் எம்பி அப்சல் அன்சாரி, ராஜ்யசபா எம்பி கபில் சிபல் ஆகியோருக்கு மாம்பழ பார்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாறாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியில் உள்ள எம்பிக்களுக்கு மாம்பழம் எதுவும் அனுப்பி வைக்கப்படவில்லை. இந்நிலையில் தான் இது அதிக கவனம் பெற்றுள்ளது. மேலும் அதன் பின்னணியில் உள்ள சுவாரசிய தகவல் என்பது வெளியாகி உள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் தூதரகம் சார்பில் நட்பு பாராட்டும் வகையில் எம்பிக்களுக்கு மாம்பழம் என்பது அனுப்பி வைக்கப்படும். அந்த வகையில் இந்த முறை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் ராகுல் காந்தி உள்பட 7 எம்பிக்களுக்கு மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளது.

சகதியில் கால் படாதா? காரை விட்டு இறங்கி வர மாட்டீங்களோ? வயநாட்டில் ராகுலிடம் சண்டைக்கு போன மக்கள்


நம் நாட்டை பொறுத்தவரை இந்த மாம்பழம் அனுப்பி நட்பு பாராட்டும் வழக்கம் ஒன்றும் புதிதல்ல. இது காலம் காலமாக நடந்து வருகிறது. தற்போது வங்கதேசத்தின் பிரதமர் பதவியை இழந்த ஷேக் ஹசீனா ஒவ்வொரு முறையும் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தனித்தனியாக மாம்பழம் அனுப்பி வைத்து நட்பு பாராட்டுவார்.

சிக்கலில் ஷேக் ஹசீனா.. நீண்டகாலம் அடைக்கலம் கொடுக்க நம் நாடு தயங்குவது ஏன்? பின்னணியில் 3 காரணம்


அதேபோல் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அறியப்படுகின்றனர். இருப்பினும் கூட மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு தங்கள் மாநிலத்தில் விளைந்த சுவை மிகுந்த மாம்பழங்களை அனுப்பி வைத்து நட்பு பாராட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

முன்னதாக இந்த மாம்பழ கலாசாரத்தை இந்தியாவும், அண்டை நாடான சீனாவுடன் தொடர்ந்து வந்தது. இந்தோ - சீனா போர் தொடங்கும் வரை 1950ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்திய தலைவர்கள், சீனாவுக்கு மாம்பழங்களை அனுப்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+