"பாலியல்".. உறவை தவிர்த்த மனைவி.. கோர்ட்டுக்கு ஓடிய கணவர்.. ஜட்ஜ் தந்த அதிரடி தீர்ப்பை பாருங்க
டெல்லி: பாலியல் உறவு தொடர்பாக, டெல்லி நீதிமன்றம் தம்பதி விவகாரத்தில் ஒரு தீர்ப்பு தந்துள்ளது.. இது பலரது கவனத்தையும் திருப்பி வருகிறது.. என்ன நடந்தது?
நீதிமன்றத்தில் எத்தனையோ விசித்திரமான தீர்ப்புகள் தரப்படலாம்.. அதேபோல, விநோதமான வழக்குகளும் வரக்கூடும்.. இப்படித்தான், மத்திய பிரதேசத்தில் ஒரு விநோத வழக்கு கோர்ட்டுக்கு போனது.
பாலியல் வழக்கு: மத்திய பிரதேசம் ரத்லம் என்ற பகுதியை சேர்ந்தவர் கந்து என்கிற காந்தீலால். இவருக்கு 35 வயதாகிறது.. தன்னுடைய நண்பர் பர்னு என்பவருடன் சேர்ந்து, இவர் இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.. இதனால், பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் தரவும், போலீசாரும் இது தொடர்பாக விசாரித்து, 2 நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கும் ரத்லம் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தநிலையில், கந்து மற்றும் பர்னு மீதான குற்றங்களை அரசு தரப்பால் நிரூபிக்க முடியாமல் போயிற்று.. இதனால், 666 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு, கந்துவும், பர்னுவும் விடுவிக்கப்பட்டனர்.

லிஸ்ட்: இப்போது, கந்து ஒரு வழக்கை தொடர்ந்தார்.. தன் மீது போலியாக கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், அதை வைத்து, 666 நாட்கள் அதாவது 2 வருடங்கள் ஜெயில் தண்டனை அனுபவித்ததாகவும், இதனால் தனக்கு மத்தியபிரதேச அரசு 10 ஆயிரத்து 6 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அதுமட்டுமல்ல ஜெயிலில் என்னவெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதையும் லிஸ்ட் போட்டு சொல்லியிருந்தார்.
"ஜெயிலில் நான் நிறைய கஷ்டப்பட்டேன்.. பொருளாதார சூழலால், என் குடும்பத்தினரால், எனக்கு உள்ளாடைகூட வாங்கி தர முடியவில்லை.. ஜெயிலுக்குள் வெயில் அடித்தது.. குளிர் அடித்தது.. அதற்கேற்ற உடைகள் இல்லாமல் அவதிப்பட்டேன்.. சிறையில் தோல் தொடர்பான நோய் வந்துவிட்டது.. தலைவலி வந்துவிட்டது.. 666 நாட்கள் நான் சிறை சென்றதால் "மனிதனுக்கு கடவுள் கொடுத்த பரிசான பாலியல் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் இழந்ததற்காக" மத்திய பிரதேச அரசு எனக்கு 10 ஆயிரம் கோடியே 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
ஒரு பெண்ணையும் நாசம் செய்துவிட்டு, தனக்கான இழப்பீடும் வேண்டம் என்று இந்த நபர் கேட்டிருந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.. இது தொடர்பான வழக்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..
இந்நிலையில், இன்னொரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.. ஒரு தம்பதியிடையே பாலியல் உறவு தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.. இதனால், கருத்து வேறுபாடுகள் தம்பதிக்குள் அதிகரித்து வந்துள்ளது. அதாவது, திருமணமானது முதலே, பாலுறவை மனைவி தவிர்த்துவந்தாராம்.. இதுதான் வழக்கின் சாராம்சம்.
எனவே, கடந்த 2014-ல் கணவர் கோர்ட்டுக்கு போய்விட்டார். தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டு வழக்கும் தாக்கல் செய்தார்.. இது தொடர்பான விசாரணை நடந்தபோது, மனைவியின் தரப்பில், "பாலுறவு என்றாலே அச்சத்துக்கு ஆளாகும் ஜீனோபோபியா" என்ற நோய் இருப்பதாக வாதாடப்பட்டது.. அத்துடன் கணவருக்கு விவாகரத்து தர முடியாது என்றும் பதில் தரப்பட்டது.
ஆனால், வழக்கை விசாரித்த டெல்லி குடும்பநல நீதிமன்றத்தின் நீதிபதி விபின் குமார் ராய், மனைவி தரப்பின் வாதத்தை ஏற்கவில்லை. "சுயமாக தன்னுடைய கணவனை முடிவெடுத்த பெண், திருமணத்துக்கு முன்பாக 11 மாதங்கள் பழகி தெளிந்த பிறகும், திருமணமான பிறகு வேண்டுமென்றே பாலுறவை தவிர்த்திருக்கிறார்.. இளம் தம்பதியர் மத்தியில் குடும்ப வாழ்க்கையில் பாலுறவு தவிர்க்க முடியாதது.. பாலுறவு என்பது இல்லற வாழ்க்கையின் அடித்தளங்களில் ஒன்று.
தீர்ப்பு: கணவன் - மனைவி இருவரில் ஒருவர் மற்றவருக்கு அதனை மறுப்பது மனரீதியிலான கொடுமை செய்வதற்கு இணையானது. மகிழ்வான மற்றும் நிறைவான குடும்ப வாழ்க்கைக்கு அவசியமான பாலுறவை வேண்டுமென்றே தவிர்ப்பது குடும்ப அமைதியை குலைக்கும்" என்றுகூறி, இருதரப்பு வாதங்களின் முடிவில், கணவர் தரப்பில் கோரிய விவாகரத்தினை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி.
கணவன் - மனைவி இருவரில் ஒருவர், வேண்டுமென்றே பாலுறவைத் தவிர்ப்பது, மனரீதியிலான கொடுமைப்படுத்துவதில் சேரும் என்று வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications