திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எட்றா பணத்த... ஏரிச்சலையில் சுற்றுவளைக்கப்பட்ட சுற்றுலாபயணி! சரமாரியாக அடித்து துவைத்த திருநங்கைகள்!

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா வருபவர்களிடம் பொது இடங்களில் திருநங்கைகள் சிலர் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டுவதோடு, சுற்றலா பயணி ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லுக்கு வார விடுமுறை, தொட‌ர் விடுமுறை காலத்தில் ஏராள‌மான‌ சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் வ‌ருகைத‌ருவ‌ர்.

தமிழகம் மட்டுமின்றி, கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் அவர்களை சங்கடத்திற்குள்ளாக்கும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன.

மதுரை மருத்துவ கல்லூரியில் சமஸ்கிருதத்தில் பழமைவாத சரகர் உறுதிமொழி ஏற்ற மாணவர்கள்- அன்புமணி கண்டனம் மதுரை மருத்துவ கல்லூரியில் சமஸ்கிருதத்தில் பழமைவாத சரகர் உறுதிமொழி ஏற்ற மாணவர்கள்- அன்புமணி கண்டனம்

சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகள்

த‌ற்போது கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு திருநங்கைகள் நான்கு முத‌ல் ஆறு பேர் சேர்ந்து சுற்றுலாப் பயணிகளிடம் வழிப்பறி செய்வது போன்று மிரட்டி, அவர்களிடமிருந்து பணம், பொருள்களைப் பிடுங்கிச் செல்கின்றனர். இப்படி பல ஆயிரம் ரூபாய்களை சுற்றுலாப் பயணிகளிடம் திருநங்கைகள் தினமும் பறித்துச் செல்வதாக புகார் எழுந்துள்ளது.

எண்ணிக்கை அதிகரிப்பு

எண்ணிக்கை அதிகரிப்பு

இந்நிலையில் தற்போது கோடைக்காலம் நெருங்கிவரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் கொடைக்கானல் ஏரிக்கரை சாலையில் திருநங்கைகள் சிலர் சுற்றுலா பயணி ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகி இருந்தது.

திருநங்கைகள் தொல்லை

திருநங்கைகள் தொல்லை

அதில் சாலையோரம் நடந்துவரும் சுற்றுலாப் பயணியிடம் மூன்று திருநங்கைகள் பணம் கேட்டுள்ளனர். அப்பொழுது பணம் தர மறுத்ததால் சுற்றுலா பயணிக்கும் திருநங்கைகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கைகலப்பானது. உடனே அங்கிருந்த சிலர் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இதுபோன்ற சம்பவங்கள் அங்கு அடிக்கடி நடப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நடவடிக்கை தேவை

நடவடிக்கை தேவை

பணம் தரவில்லை என்றால் சாபம் விடுவது, முகம் சுளிக்கும் வகையில் பொது இடங்களில் நடந்து கொள்வது என சில திருநங்கைகள் ஈடுபடுவதாக தெரிவிக்கின்றனர். இதற்கு போலீசார்தான் தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர் அப்பகுதி மக்கள். எனவே தமிழக அரசும் காவல்துறையினரும் கொடைக்கானலுக்கு வரும் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

English summary
In Kodaikanal, Dindigul district, some transgender people have been harassing and extorting money from tourists in public, and a video of a tourist being attacked has caused a stir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X