கொத்து கொத்தாய் கொல்லப்பட்ட கோழிகள்! ஒன்றல்ல இரண்டல்ல நான்காயிரம்! பரபர பழனி! ஓனர் போட்ட பலே திட்டம்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வயலூரில் நான்காயிரம் இறந்த கோழிகளை கொன்று புதைக்க முயன்ற போது வாகனத்தை தடுத்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீண்டும் வாகனம் எடுத்துச் செல்லப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ளது மேல்கரைப்பட்டி. இங்கு எவிஏஜென் என்கிற தனியார் கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் வளர்க்கப்பட்டு வந்த நான்காயிரம் கோழிகளை கொன்று, வயலூர் அருகே உள்ள நந்தகுமார் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் புதைக்க முடிவு செய்தனர்.

பழனியில் அதிர்ச்சி
இதன்படி இன்று அதிகாலை இறந்த கோழிகளை வாகனங்களில் ஏற்றி செல்லப்பட்டு நந்தகுமார் என்பவரின் விவசாய தோட்டத்தில் இறந்த கோழிகளை புதைக்க எடுத்து சென்றனர். இதுகுறித்த தகவல் அறிந்து, வயலூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணியின் கணவர் மகுடீஸ்வரன் தலைமையிலான பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். குழி தோண்டி கோழிகளை புதைக்க இருப்பதை தடுத்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

4000 ஆயிரம் கோழிகள்
அப்போது கோழிகளை புதைக்க வந்த தனியார் நிறுவன அதிகாரிகள், கோழிகள் விற்பனை ஆகாததால் கோழிகளை கருணைக் கொலை செய்து அதனை புதைக்க வந்ததாகவும், கோழி இறைச்சி நிறுவனத்தில் நந்தகுமார் வேலை செய்பவர் என்பதால், அவரது சம்மதத்தோடு அவருடைய தோட்டத்தில் புதைப்பதாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கோழிகளை இங்கு புதைக்க கூடாது என்றும் வைரஸ் பாதித்த கோழிகளாக இருக்கலாம் எனவும், எனவே கோழிகளை புதைக்க கூடாது எனக் கூறி பொதுமக்கள் தடுத்தனர்.

பொதுமக்கள் அதிர்ச்சி
ஒரு கோழி இறைச்சி நிறுவனத்திற்கு ஆதரவாக நெய்க்காரப்பட்டி பேரூர் கழக திமுக செயலாளர் அபுதாகீர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக பேரூர் கழக செயலாளர் அபுதாகீர் கோழி இறைச்சி நிறுவனத்தில் கமிஷன் பெற்றுக் கொண்டு, இதே வேலையை அடிக்கடி செய்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாமிநாதபுரம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பெரும் பரபரப்பு
இதில் கோழிகளை இப்பகுதியில் புதைக்க மாட்டோம் என்றும் இனிமேல் இப்பகுதியில் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்றும் தனியார் கோழி இறைச்சி நிறுவனம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து கோழி இறைச்சி ஏற்றி வந்த வாகனமும் திருப்பி எடுத்துச் செல்லப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications