Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடைக்கானலில் விழுந்த கோடு! நிலச்சரிவை தொடர்ந்து.. 300 அடி நீளத்திற்கு நில பிளவு! மக்கள் அச்சம்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இதன் பரபரப்பு அடங்குவதற்குள், கொடைக்கானல் மலைப்பகுதியில் நில பிளவு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 300 அடி நீளம் வரை ஏற்பட்டுள்ள இந்த பிளவு புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை மாத இறுதியில் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தியது. ஜூலை 29-30ம் தேதிகளில் பெய்த கனமழைதான் இந்த நிலச்சரிவுக்கு முக்கிய காரணம். பொதுவாக மண் பல அடுக்குகளை கொண்டிருக்கும். தொடர்ச்சியாக பெய்த மழையானது இந்த அடுக்குகளுக்கு இடையே உள்ள இறுக்கத்தை தளர்த்தியுள்ளது. அடுத்த நாளும் பெய்த கனமழை, தளர்ந்த மண்ணை சரிய செய்திருக்கிறது.

kodaikanal wayanad

இந்த மண், மலை அடிவாரத்தில் இருந்த கிராமங்களை முழுக்க அப்படியே மூடியிருக்கிறது. குறிப்பாக முண்டக்கை மற்றும் சூரல்மலை என இரண்டு கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வீடுகள் இருந்ததற்கான அடையாளம் கூட தெரியாத அளவுக்கு மண் மூடியுள்ளது. சம்பவம் நடந்தது அதிகாலை நேரம் என்பதால் என்ன நடக்கிறது என்பதை யாராலும் உடனடியாக உணர முடியவில்லை. தூக்கத்திலேயே மக்கள் தங்கள் உயிரை இழந்தனர்.

விவரம் அறிந்து மீட்டு படையினர் இப்பகுதிகளுக்கு வருவதற்கு முன்னர் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. உயிரை பிடித்துக்கொண்டு உதவியை எதிர்பார்த்திருந்த மக்கள் காப்பாற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். புதைந்து போனவர்களின் சடலங்களை தோண்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 336 பேரின் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. 78 பேரின் நிலை என்ன ஆனது என இப்போது வரை தெரியவில்லை.

வயநாடு நிலச்சரிவு சோகம் இன்னும் அகலாத நிலையில், கேரளாவை ஒட்டியுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, கொடைக்கானலில் இருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் உள்ள 'கிளாவரை' எனும் பகுதியில் நில பிளவு ஏற்பட்டிருக்கிறது.

இங்குள்ள மக்களுக்கு குழாய் வழியாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக நீர் வரவில்லை. சந்தேகமடைந்த கிராம மக்கள் குழாய் வரும் பாதையை ஆய்வு செய்தனர். அப்போதுதான் நில பிளவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

கிளவரை மலைப்பகுதியில் சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு பிளவு ஏற்பட்டிருக்கிறது. இங்கு கட்டுமான பணிகளோ, சுரங்க பணிகளோ ஏதும் நடக்கவில்லை. அப்படியெனில் இந்த பிளவு எப்படி உருவானது? என்று கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மட்டுமல்லாது இந்த பகுதி கேரளாவை ஒட்டியுள்ள பகுதி என்பதால், வயநாட்டில் ஏற்பட்டதை போன்ற நிலச்சரிவு இங்கும் ஏற்படுமோ? என்றும் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து அரசு அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு காரணத்தை தெரியப்படுத்த வேண்டும் என்றும், ஆபத்து இருப்பது கண்டறியப்பட்டால், தங்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+