ஒருவருக்கு ஒரு பதவி! சாட்டை எடுத்த திமுக! கலக்கத்தில் ’மூத்த தலைகள்’ .. உற்சாகத்தில் உடன்பிறப்புகள்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்பதை தனது தொகுதியான ஆத்தூரில் இருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எடுத்த நடவடிக்கையால் மாவட்டம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் தங்களுக்கு பதவி கிடைக்கலாம் என்பதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட திமுகவின் மிக மூத்த நிர்வாகியும், மாவட்டத்தில் இரு மாவட்ட செயலாளர்கள் இருந்தாலும் கட்சியின் முக்கிய முகமாக இருப்பவர் ஐ.பி.யார் என கட்சியினரால் அழைக்கப்படும் ஐ.பெரியசாமி.
கடந்த திமுக ஆட்சிக் காலங்களில் முப்பெரும் துறை அமைச்சராக இருந்த அவர், தற்போதைய திமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும் அப்போதைய அதிமுக முக்கிய புள்ளியாக இருந்த நத்தம் விஸ்வநாதனை தோற்கடித்து அவரது அரசியல் வாழ்க்கைக்கு "கமா" வைத்தவர். இதனையடுத்து நடைபெற்ற தேர்தல் தன்னை எதிர்த்து போட்டுயிட்ட பாமக வேட்பாளர் திலகபாமாவை ஏறக்குறைய ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர்.

அதிரடி நடவடிக்கை
கடந்த நகர்ப்புற மற்றும் உள்ளாட்சித் தேர்தளின் போது, திண்டுக்கல் மாவட்டத்தில் தொன்னூற்று ஒன்பது சதவீதம் வெற்றியை ஐ.பி உறுதி செய்தார் . பெரும்பாலான இடங்களில் மாநகர நகர பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் அவரது துணைவியார் தலைவர் துணைத் தலைவராக ஆக்கப்பட்டனர் எதிர்பார்த்த பலர் ஏமாற்றம் அடைந்த நிலையில் அவர்களை திருப்திபடுத்தும் வேலையில் இறங்கியுள்ளார்.

ஒருவருக்கு ஒரு பதவி திட்டம்
கட்சி மற்றும் ஆட்சி அதிகாரம் ஒருவரிடம் மட்டுமே இருப்பதை விரும்பாத ஐ.பி ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் தலைவராக இருப்பவர் கள் செயலாளர்களாக இருப்பதை தவிர்க்கும் விதமாக தனது தொகுதியான ஆத்தூரில் அய்யம்பாளையம் பேரூர் செயலாளராக செயல்பட்டு வரும் தனது உறவினரான ஐயப்பனை பதவியை ராஜினாமா செய்ய வைத்து தங்கராஜ் என்பவருக்கு பேரூர் பொறுப்பாளர் பதவி வழங்கி உள்ளார் இதேபோல் கன்னிவாடி பேரூர் செயலாளர் சண்முகத்திற்கு பதில் இளங்கோவன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் .

நிர்வாகிகள் கலக்கம்
ஆத்தூரில் தனது ஆட்டத்தைத் தொடங்கி வைத்துள்ள ஐபி மாவட்டம் முழுவதும் உள்ள மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் தலைவராக செயல்படும் திமுக செயலாளர்களின் பதவி வேறு ஒருவருக்கு வழங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் வரும் உட்கட்சித் தேர்தலில் நீண்ட நாட்களாக நகர.பேரூர் செயலாளர்களாக நீடித்து வந்த பலரையும் தூக்கிவிட்டு புதியவர்களை நியமிக்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திண்டுக்கல் திமுக நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
-
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications