திண்டுக்கல்லில் வெளுக்கும் கனமழை! ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல்! பிரதமர் பயணத்தில் மாற்றம்?
திண்டுக்கல் : பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக காந்திகிராமத்திற்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருக்கும் நிலையில், காலையிலிருந்தே திண்டுக்கல்லில் மழை பெய்து வருவதால், மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக திண்டுக்கல்லுக்கு பிரதமர் நரேந்திர மோடி காரில் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video

திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச் சாலையில் சின்னாளபட்டி பகுதியில் காந்தி கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பல்கலைக் கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக பெங்களூருவில் இருந்து மதுரை வரும் பிரதமர் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, மதுரையில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வர இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி
இதையொட்டி காந்திகிராம பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பே ஹெலிபேட் அமைக்கப்பட்டது. பிரதமர் வருகைக்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் தற்போதைய ஹெலிபேடில் ஹெலிகாப்டரை இறங்க வைத்து மீண்டும் சோதனை நடைபெற்றது. பிரதமர் வருகையொட்டி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் ஐஜி, டிஐஜி, திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்ட நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
தற்போது போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினும் இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ஈரோடு கரூர் மாவட்டங்களில் தனியார் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்வர் இன்று சாலை மார்க்கமாக திண்டுக்கல் வந்து பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

பயண திட்டத்தில் மாற்றம்
இந்நிலையில் திண்டுக்கல்லில் மழை பெய்து வருவதால் மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக திண்டுக்கல்லுக்கு பிரதமர் நரேந்திர மோடி காரில் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையிலிருந்து மழை பெய்து வருகிறது இதன் காரணமாக ஹெலிகாப்டர் அம்பாத்துறையில் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டத்தில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

வாகன ஒத்திகை
ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக நேற்று ஒரு மணி முதல் மாலை 5 மணி வரையும், இன்று காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை மதுரை மார்க்கத்தில் இருந்து திண்டுக்கல் மற்றும் திண்டுக்கல் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் அலங்காநல்லூர் நத்தம் வழியாக செல்லும் எனவும் இந்த நேரங்களில் மதுரை திண்டுக்கல் 4 வழி சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் பிரதமர் பாதுகாப்பு வாகனங்களும் இரு முறை 58 தூர வழியில் ஒத்திகை பார்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பிரதமரின் பயணம் இறுதி மாறுதலுக்குட்பட்டது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications