டெல்டா பிளஸ் வைரசுக்கு எதிராக செயல்படும் கோவாக்சின்.. ராஜஸ்தான் பெண் குணமடைந்தார்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் டெல்டா பிளஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பெண், கோவாக்சின் செலுத்திக் கொண்டவர் என்பதும், தற்போது நலம் பெற்றுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Recommended Video
மோசமான கொரோனா உருமாற்றமாக பார்க்கப்படுவது டெல்டா பிளஸ். ஆனால், கோவாக்சின் தடுப்பூசி அந்த வைரஸ் தாக்கிய பெண்ணின் உயிரை காப்பாற்ற முக்கிய பங்காற்றியுள்ளது.
ராஜஸ்தானின் பிகானிர் பகுதியைச் சேர்ந்த பெண் அந்த மாநிலத்தில் முதல் முறையாக டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர். அவரை தாக்கிய வைரஸ் மாதிரி புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு டெல்டா பிளஸ் என்பது உறுதி செய்யப்பட்டது.

மே 30ம் தேதி மாதிரி அனுப்பப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமைதான் அதன் முடிவுகள் வெளியாகின. அதற்குள்ளாக அந்த பெண் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார். எனவே டெல்டா பிளஸ் ஏற்கனவே சமூகத்தில் பரவியிருந்ததும், தடுப்பூசி அதற்கு எதிராக வேலை செய்வதும் உறுதியாக தெரிகிறது.
குறிப்பிட்ட அந்த பெண் அறிகுறிகள் இல்லாமல்தான் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் ஏற்கனவே, கோவாக்சின் தடுப்பூசி போட்டிருந்தார் என்கிறார்கள் டாக்டர்கள்.












Click it and Unblock the Notifications