கூண்டோடு சிக்கும் மதுரை அமலாக்கத்துறை ஆபீஸ்? லஞ்சத்தை கூறு கூறாக பங்கு பிரித்த அதிகாரிகள் யார் யார்?
திண்டுக்கல்: மதுரை அமலாக்கத்துறை அலுவலக அதிகாரிகள் பலருக்கும் தாம் லஞ்சத்தை பங்கிட்டு பிரித்து கொடுத்ததாக திண்டுக்கல்லில் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம். இதனடிப்படையில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் மேலும் பல அதிகாரிகள் சிக்கப் போவதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல் அரசு மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு மீதான அமலாக்கத்துறை வழக்கை காரணம் காட்டி சுமார் ரூ1 கோடி முதல் ரூ3 கோடி வரை அங்கித் திவாரி உள்ளிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் பேரம் பேசியிருக்கின்றனர். ரூ1 கோடி முதல் ரூ3 கோடி வரை மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் வழக்கு தூசு தட்டப்படாது என வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் முதலில் ரூ20 லட்சம் லஞ்சம் கொடுத்துவிட்டாராம் டாக்டர் சுரேஷ் பாபு.

இதனைத் தொடர்ந்து லஞ்சம் கேட்டு அங்கித் திவாரியும் இதர அதிகாரிகளும் டாக்டர் சுரேஷ் பாபுவை டார்ச்சர் செய்துள்ளனர். இதனால் உயிருக்கு அஞ்சிய டாக்டர் சுரேஷ் பாபு, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் ரூ31 லட்சம் லஞ்சப் பணத்துடன் தப்ப முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை சினிமா பட பாணியில் விரட்டிப் பிடித்து கைது செய்தனர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார். பின்னர் 15 மணிநேர விசாரணை நடத்தி திண்டுக்கல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரி ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனிடையே மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை குறிவைத்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். முதலில் இந்த சோதனைக்கு அமலாக்கத்துறை அலுவலக அதிகாரிகள் ஒத்துழைப்பு தராமல் மத்திய படையை வரவழைத்தனர். தமிழ்நாடு போலீசாரும் மத்திய படையும் குவிக்கப்பட்ட நிலையில் பல மணிநேரம் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி இருக்கின்றனராம்.
திண்டுக்கல் டாக்டர் சுரேஷ் பாபு போல ஏராளமானவர்களிடம் லஞ்சப் பணத்தை பெற்று கூறு போட்டு பிரித்து கொள்வதை மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கமாக வைத்திருப்பதும் இந்த ஆவணங்களில் தெரியவந்துள்ளதாம். இதனால் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தை சேர்ந்த மேலும் பல அதிகாரிகள் அடுத்தடுத்து சிக்கப் போகின்றனர் என்கின்றன தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரங்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications