Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூண்டோடு சிக்கும் மதுரை அமலாக்கத்துறை ஆபீஸ்? லஞ்சத்தை கூறு கூறாக பங்கு பிரித்த அதிகாரிகள் யார் யார்?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: மதுரை அமலாக்கத்துறை அலுவலக அதிகாரிகள் பலருக்கும் தாம் லஞ்சத்தை பங்கிட்டு பிரித்து கொடுத்ததாக திண்டுக்கல்லில் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம். இதனடிப்படையில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் மேலும் பல அதிகாரிகள் சிக்கப் போவதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திண்டுக்கல் அரசு மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு மீதான அமலாக்கத்துறை வழக்கை காரணம் காட்டி சுமார் ரூ1 கோடி முதல் ரூ3 கோடி வரை அங்கித் திவாரி உள்ளிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் பேரம் பேசியிருக்கின்றனர். ரூ1 கோடி முதல் ரூ3 கோடி வரை மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் வழக்கு தூசு தட்டப்படாது என வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் முதலில் ரூ20 லட்சம் லஞ்சம் கொடுத்துவிட்டாராம் டாக்டர் சுரேஷ் பாபு.

Tamil Nadu DVAC Police to arrest more Madurai ED officers for Bribe Charges

இதனைத் தொடர்ந்து லஞ்சம் கேட்டு அங்கித் திவாரியும் இதர அதிகாரிகளும் டாக்டர் சுரேஷ் பாபுவை டார்ச்சர் செய்துள்ளனர். இதனால் உயிருக்கு அஞ்சிய டாக்டர் சுரேஷ் பாபு, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் ரூ31 லட்சம் லஞ்சப் பணத்துடன் தப்ப முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை சினிமா பட பாணியில் விரட்டிப் பிடித்து கைது செய்தனர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார். பின்னர் 15 மணிநேர விசாரணை நடத்தி திண்டுக்கல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரி ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனிடையே மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை குறிவைத்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். முதலில் இந்த சோதனைக்கு அமலாக்கத்துறை அலுவலக அதிகாரிகள் ஒத்துழைப்பு தராமல் மத்திய படையை வரவழைத்தனர். தமிழ்நாடு போலீசாரும் மத்திய படையும் குவிக்கப்பட்ட நிலையில் பல மணிநேரம் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி இருக்கின்றனராம்.

திண்டுக்கல் டாக்டர் சுரேஷ் பாபு போல ஏராளமானவர்களிடம் லஞ்சப் பணத்தை பெற்று கூறு போட்டு பிரித்து கொள்வதை மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கமாக வைத்திருப்பதும் இந்த ஆவணங்களில் தெரியவந்துள்ளதாம். இதனால் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தை சேர்ந்த மேலும் பல அதிகாரிகள் அடுத்தடுத்து சிக்கப் போகின்றனர் என்கின்றன தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+