துபாயில் வேலைக்கு போகிறீர்களா.. இந்தியர்களே உஷார்! இந்த பிரச்சனை உங்களை காலி செய்யலாம்!
துபாய்: துபாயில் இளம் தலைமுறையினர், பகுதி நேர வேலைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது முழு நேர வேலையை முழுவதுமாக பாதிக்கும் என்று மனிதவள மேம்பாட்டு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவிலிருந்து பலரும் வேலை தேடி துபாய் செல்கின்றனர். துபாய், ஐக்கிய அமீரகம் ஆகியவை, இளைஞர்களுக்கான மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம்களாக இருக்கிறது. ஆனால், இங்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் செய்யும் தவறுகளால், அவர்களது மொத்த வேலையும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும் என்று எச்சரிக்கை எழுந்திருக்கிறது.

ஆய்வில் அதிர்ச்சி
சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில், இளம் தலைமுறையினர் அதாவது Gen-Z இளைஞர்களில் சுமார் 60 சதவீதம் பேர், ஒரு முழுநேர வேலையுடன் பகுதி நேர வேலையையும் செய்கிறார்கள். மற்றவர்கள், அதாவது Gen-Y பணியாளர்களில் சுமார் 50 சதவீதம் பேர், ஒன்றுக்கும் மேற்பட்ட வருமான ஆதாரங்களை வைத்திருக்கிறார்கள்.
இளம் தலைமுறையினர்
இளம் வயதினர் வெறும் ஆசைக்காக மட்டும் இதை செய்யவில்லை. மாறாக, பொருளாதார சூழல் அவர்களை தூண்டுகிறது. துபாயில் வீட்டு வாடகை மற்றும் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதே நேரம், முழு நேர வேலையில் சம்பளம் பெரிய அளவில் உயராமல் இருக்கிறது. இது தவிர, திடீர் வேலை இழப்பு உள்ளிட்டவையும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலையில் கவனம்
எனவே, இந்த பிரச்சனையிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் எதிர்கால வேலையை பறிக்கலாம் என்பதாலும், முன்கூட்டியே புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேறு வேலைகளில் கவனம் செலுத்துகின்றனர்.
முதன்மை வேலை பாதிப்பு
மேலோட்டமாக பார்த்தால், இது பாசிட்டிவாக தோன்றும். ஆனால், இரண்டு அல்லது மூன்று வேலைகளை செய்யும்போது.. அவர்களுடைய முதன்மையான வேலை நேரடியாக பாதிக்கிறது. போதிய ஓய்வு இல்லாததால் ஊழியர்கள் அதிகம் சோர்வடைந்து பணியிடத்தில் செயல்திறன் குறைகிறது. தூக்கம் இல்லாததன் காரணமாக வேலை இடத்தில் கவனக் குறைவு, தாமதமாக அலுவலகம் வருவது, அல்லது முன்னதாகவே செல்வது போன்ற புகார்கள் எழுகின்றன.
வேலையில் நெகிழ்வுத்தன்மை
நிறுவனத்தின் மீதான பற்று, மற்றும் நீண்ட காலம் உழைப்பு குறைந்து.. அவர்கள் பகுதி நேர வேலையை பெரிதாக கருதும் நிலை ஏற்படுகிறது. இளம் தலைமுறையினர் பெரும்பாலும் கிரிப்டோ கரன்சி முதலீடுகள், சோஷியல் மீடியாக்களில் கண்டெண்ட்களை உருவாக்குதல் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
இது அவர்களுக்கு அதிக சுதந்திரத்தையும், வீட்டிலிருந்தே வேலை செய்யும் நிகழ்வுத் தன்மையும் வழங்குகிறது. இருப்பினும் இப்படி செய்வதால் எந்த வேலையையும் முழுமையாக செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு.. இருக்கிற வேலையும் பறிபோகும் அபாயம் உருவாகலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே வேலை தேடி துபாய் செல்லும் இந்திய இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
-
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications