செம.. செய்த தப்பை திருத்தும் டீம் இந்தியா.. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 'திரிசுழல்' வியூகம்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கும் இந்தியா, ஒரு சூப்பர் பிளானை கையில் எடுக்கப் போகிறதாம்.

நடப்பு டி20 உலக கோப்பை 2021 போட்டித் தொடரை இந்தியாதான் நடத்தி வருகிறது. ஆனால், கொரோனா பரவல் பிரச்சினையால், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தி வருகிறது.

மதியம் 3.30 மணிக்கு துவங்கும் போட்டி என்றால் அங்கு நல்ல வெயில் இருக்கும். ஆனால் இந்தியா பிரைம் டைம் என்று சொல்லப் படக் கூடிய இரவு 7.30 மணி ஆட்டங்களில் ஆடும் வகையில் போட்டி அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது. வெயிலுக்கு தப்பி இரவு ஆடலாம் என்று சந்தோஷப்பட முடியவில்லை. காரணம், எமிரேட்சில் இரவு பெய்யும் பனி ஒரு பிரச்சினையாக மாறி விடுகிறது.

டாஸ் வென்றவர் வெற்றியாளர்

டாஸ் வென்றவர் வெற்றியாளர்

டாஸ் யார் வெற்றி பெற்று முதலில் பவுலிங் வீச தீர்மானிக்கிறார்களோ அந்த டீம்தான் வெற்றி பெறுகிறது. ஒரு போட்டியை தவிர இதுவரை அனைத்து போட்டி ரிசல்ட்டும் இதுதான். அதாவது டாஸ் வென்ற அணி போட்டியில் வென்று விடும் என முடிவு செய்து விட்டு டிவியை ஆப் செய்து விட வேண்டியதுதான். இரண்டாவது பந்து வீசும் அணியின் வீரர்களுக்கு பனி காரணமாக பந்தில் கிரிப் கிடைப்பதில்லை. நினைத்த இடத்தை தவிர வேறு எங்கெல்லாமோ பந்து போகிறது.

வேகப்பந்து வீச்சாளர்கள்

வேகப்பந்து வீச்சாளர்கள்

குறிப்பாக, வேகப் பந்து வீச்சாளர்களுக்கு இந்த பிரச்சினை அதிகம். இந்த நிலையில்தான், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 3 சுழல் பந்து வீச்சாளர்களுடன் (3 சுழல்) களமிறங்க உள்ளது இந்தியா என்று தகவல் வெளியாகியுள்ளது. முகமது ஷமி அல்லது புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டு அவருக்கு பதில் அஸ்வின் களம் காண்பார். அனேகமாக இரு வேகப் பந்து வீச்சாளர்களுக்கும் கல்தா தரப்படும். ஷர்துல் தாக்கூர் அதற்கு பதில் ஒரு வேகப் பந்து வீச்சாளராக களமிறங்க உள்ளார் என்கிறார்கள்.

Recommended Video

    T20 World Cup 2021 : Ind Vs NZ இந்திய அணி வென்றதே இல்லை | Oneindia Tamil
    பாகிஸ்தான் போட்டி

    பாகிஸ்தான் போட்டி

    பாகிஸ்தானுக்கு எதிராக பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகிய மூன்று வேகப் பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கியது. அது பலன் தரவில்லை. எனவே அடுத்த போட்டியிலிருந்து இரு வேகம், 3 ஸ்பின்னர் என்ற கணக்கோடு கால் பதிக்க உள்ளது இந்தியா என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பந்து வழுக்காது

    பந்து வழுக்காது

    ட்யூ காரணமாக பந்து வழுக்கினாலும், அது, சுழல் பந்து வீச்சாளர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது, சுழல வைப்பதில் சிரமம் இருக்கலாம். ஆனால் லென்த் பந்துகளை வீசும்போது சிரமம் குறைவுதான். டி20 போட்டிகளில் பெரும்பாலும் ஸ்பின்னர்கள் பந்துகளை அதிகம் சுழல வைப்பதில்லை. பிளாட்டாகத்தான் வீசுகிறார்கள். ரன் தரக் கூடாது என்ற நோக்கம்தான் இதற்கு காரணம். எனவே 3 ஸ்பின்னர்களோடு களமிறங்கினால் பனியை பார்த்தும் பயம் வேண்டாம் என்று நினைக்கிறது டீம் இந்தியா.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+