"கச்சத்தீவு! அதில் மிக உறுதியாக உள்ளோம்.. நீங்களே காண்பீர்கள்!" சொல்கிறார் பாஜக சி.பி.ராதாகிருஷ்ணன்
ஈரோடு: ஈரோட்டில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பேசிய பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.
ஈரோடு மாவட்டத்தில் பாஜக புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர் கச்சத்தீவு விவகாரம், பஞ்சு விலையேற்றம், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

சிபி ராதாகிருஷ்ணன்
ஈரோட்டில் புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் நிகழ்ச்சியில் பேசிய பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் , "மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை எனக் குற்றம்சாட்டும் தமிழக நிதியமைச்சர், நிலக்கரி, மின்சாரம் போன்றவற்றுக்கு மாநில அரசு தர வேண்டிய நிலுவைத் தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஜிஎஸ்டி-யில் அனைத்து மாநில அரசுக்கும் தர வேண்டியதை மத்திய அரசு முறையாகவே வழங்கி வருகிறது,,

திராவிட மாடல்
திமுக அரசு திராவிட மாடல் என்று கூறி தமிழர்களைச் சீரழித்துள்ளார்கள். இந்தியா முழுவதையும் சீரழிக்கத் தான் நாட்டில் இப்போது 'திராவிட மாடல்' பரவுகிறது என்று கூறுகிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியிலும் காமராஜர் ஆட்சியிலும் கட்டப்பட்ட அணைகள் தான் தமிழகம் முன்னேறிய மாநிலமான மாற காரணம். காமராஜர் போன்ற தலைவர்கள் இவர்கள் எப்படிப் பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அவர் மறைந்த பின்னர், அவர்களையும் திராவிட மாடலில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

தமிழ்
நாங்கள் தாய் தமிழ் மொழியை மிகவும் உயர்வாக மதிக்கிறோம். பிரதமர் மோடி சமஸ்கிருதத்தைக் காட்டிலும், தமிழ்மொழி உயர்வானது எனக் கூறி உள்ளார், அதனால் இந்தி, சமஸ்கிருதத்தை மத்திய அரசு புகுத்துவதாகக் குற்றம்சாட்டுவது தவறு. ராகுல்காந்தி அரசியல் முதிர்ச்சி அற்றவர் என்பதால், பிரதமர் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். இப்போது தான் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜெர்மனி போன்ற நாடுகள் கூட இந்தியாவை உயர்வாகக் கருதுகிறது. மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா உருமாறிக் கொண்டு இருக்கிறது.

கச்சத்தீவு
கச்சத்தீவை மீட்பதில் மத்திய பாஜக அரசு உறுதியாக உள்ளது. அதுவே பாஜகவின் கொள்கை. விரைவில் இந்த விவகாரத்தில் முன்னேறத்தை மக்கள் காண்பார்கள். திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு, சிமெண்ட் விலையேற்றம், கேரளாவுக்கு அரிசி கடத்தல் போன்றவை தொடங்கிவிடும். எதற்கு எடுத்தாலும் மத்திய அரசு குறை சொல்வதை விட்டுவிட்டு, தமிழகத்தின் முன்னேற்றத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க வேண்டும்,

பாஜக
மேலும், பஞ்சு மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்கியுள்ளதால், இன்னும் 45 நாட்களுக்குள் பஞ்சு விலை குறைந்து, நூல் விலையும் குறையும் என்றும், அப்போது ஜவுளித் தொழில் நெருக்கடி தீரும். பாஜகவில் ஒருவர் இரு முறைக்கு மேல் ஒரு பதவியில் இருக்க முடியாது .அதன்படிதான் தேர்தல் நடைபெற்று உள்ளது. இது வாரிசு அடிப்படையில் வருவதல்ல. பாஜக ஒரு கட்டுக்கோப்பான கட்சியாகும். புதிய நிர்வாகிகளுக்கு ஏற்கனவே இருந்த நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்" என்றார்.
-
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications