கட்டிடத்துக்குள் 18 வயது பெண்ணை தூக்கி சென்ற 6 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்.. மீண்டும் ஒரு ஷாக்
பெண்ணை பலாத்காரம் செய்த 6 பேர் கைதாகி உள்ளனர்
ஹைதராபாத்: 18 வயது இளம்பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் தெலுங்கானாவை அதிர வைத்து வருகிறது.
தெலுங்கானாவில் நிஜாமாபாத்தில் வசித்து வந்துள்ளார் அந்த 18 வயது மாணவி.. தன்னை சந்திக்க வேண்டும் என்று இவரது நண்பர் சொன்னதால், அதை நம்பி மாணவியும் சென்றுள்ளார்..
அப்போது மாணவியும், அந்த நண்பரும் மது அருந்த முடிவு செய்துள்ளனர்.. நேரம் ஆக ஆக நிறைய மதுவை மாணவிக்கு ஊற்றி தந்துள்ளார் நண்பர்..

போதை
ஒருகட்டத்தில் மது அருந்தியதில் மாணவி போதையால் நிலைகுலைந்து விழுந்து விட்டார்... இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த நண்பர், உடனே செல்போனில் தன்னுடைய 3 நண்பர்களை வரவழைத்துள்ளார்.. 4 பேரும் சேர்ந்து அந்த மாணவியை கட்டுமான வேலை நடைபெற்று வந்த ஒரு கட்டிடத்திற்குள் தூக்கிச் சென்றுள்ளனர்.. அங்கு சென்றபிறகு, மேலும் 2 நண்பர்களை போன் போட்டு அழைத்துள்ளனர்.

சிகிச்சை
மொத்தம் 6 பேராக சேர்ந்து அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர்..நீண்ட நேரம் கழித்துதான் மாணவிக்கு சற்று போதை தெளிந்துள்ளது.. மயக்கம் தெளியவே நள்ளிரவு 2 மணி ஆகிவிட்டது.. அப்போதுதான் தன்னுடைய நிலைமையை உணரந்து கதறி அழுதுள்ளார். உடனே போலீசுக்கு 100-க்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார்.. போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்..

அதிர்ச்சி
தற்போது அவருக்கு தீவிரமான சிகிச்சை நடந்துவருகிறது.. அதேசமயம், மாணவியிடம் நடத்திய வாக்குமூலத்தை வைத்து சம்பந்தப்பட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்நாளுக்கு நாள் தெலுங்கானாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் 6 வயது சிறுமி, பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

கவலை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று தலைவர்களும் ஆவேசமாக பேட்டிகளை தந்திருந்தனர்.. இதுதொடர்பான விசாரணை இன்னும் முழுமையாக நடந்து முடியவில்லை.. அதற்குள் இன்னொரு சம்பவம் இப்படி நடந்துள்ளதும், பெண்களுக்கு இதே நிலை தொடர்வதும் அம்மாநில மக்களை கவலை கொள்ள வைத்து வருகிறது...
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications