சந்தியா டீச்சரின் உயிரையே பறித்த தொற்று.. தேர்தல் டியூட்டிக்கு போன இடத்தில் நடந்த துயரம்..!
தேர்தல் பணிக்கு சென்ற பள்ளி ஆசிரியை தொற்று பாதித்து உயிரிழந்தார்
ஹைதராபாத்: தேர்தல் டியூட்டிக்கு போன இடத்தில், தன்னுடைய மனைவிக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக அவரது கணவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
தெலுங்கானாவில் நாகார்ஜுனாசாகர் சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்தது.. அப்போது, தேர்தல் அமர்த்தப்பட்டவர்தான் சந்தியா..!
இவர் ஒரு பள்ளி ஆசிரியை.. ஏப்ரல் 17 ம் தேதி தேர்தல் பணிக்கு வந்துள்ளார்.. ஆனால் வந்த இடத்தில் இவருக்கு எப்படியோ தொற்று பரவி உள்ளது.. அதனால், அடுத்த சில நாட்களில் சந்தியா சிகிச்சையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.. ஆனால் பலனின்றி இறந்துவிட்டார்.

ஆசிரியை
இதையடுத்து, அவரது கணவரின் கம்மம்பதி மோகன் ராவ் மற்றும் 8 வயது மகளும் நிலைகுலைந்து போயுள்ளனர். கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சந்தியாவுக்கு காய்ச்சல் வந்துள்ளது.. அப்போதுதான் டெஸ்ட் எடுத்து பார்த்தபோது தொற்று உறுதியாகி உள்ளது.. அதனால், ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் ஐசியூவில் சந்தியாவை அனுமதித்துள்ளனர்..

கணவர்
டாக்டர்கள் எவ்வளோ போராடியும் மே 8-ம்தேதி சந்தியா இறந்துவிட்டார்.. அவருக்கு வயது 35 வயதாகிறது. இதுகுறித்து அவரது கணவர் சொல்லும்போது, "அவள் என் மனைவி மட்டுமல்ல.. என் உயிரையே இழந்துவிட்டேன்.. நாட்டில்தான் தொற்று பாதிப்பு இருக்கிறதே, அப்படி தெரிந்தும் எதற்காக தேர்தல்கள் நடத்தப்பட்டன? ஒரு எம்எல்ஏவுக்காக நடத்தப்பட்ட தேர்தலில் பலர் இறக்க வேண்டுமா?

வாக்குச்சாவடி
இன்று என் குடும்பமே நிர்க்கதியாய் நிற்கிறது.. லாக்டவுன் முடிஞ்சப்பறம் தேர்தல் நடத்தியிருக்கலாமே? அல்லது எல்லாருக்கும் தடுப்பூசி போட்டப்பறம் தேர்தல் நடத்தியிருக்கலாமே?.. தேர்தலின்போது கொரோனா விதிமுறைகள் பல மீறப்பட்டுள்ளன.. அன்றைய தினம், 30 க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி ஊழியர்கள் ஒரே பஸ்ஸில்தான் அழைத்து கொண்டு பூத்துக்கு சென்றனர்.. ஒரு சின்ன கிளாஸ் ரூமில், 5 வாக்குப்பதிவு ஊழியர்கள், 4 வாக்குச்சாவடி முகவர்கள் என குறைந்தது 10 பேர் உட்கார்ந்திருந்தனர்..

தேர்தல் விதி
அதுவும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஒன்றாகவே உட்கார்ந்திருந்தனர்.. கடைசி நேரத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் வாக்களிக்க வந்தபோதுகூட, வாக்குப்பதிவு ஊழியர்களுக்கு பிபிஇ கிட் வழங்கப்படவில்லை.. கடைசியில் நான் என் மனைவியை பறிகொடுத்துவிட்டேன்" என்று கண்ணீருடன் சொல்கிறார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications