Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் நரேஷின் ரூ 1500 கோடி சொத்தை அபகரிக்க பவித்ரா லோகேஷ் மாஸ்டர் பிளான்.. முதல் கணவர் பகீர்

நடிகை பவித்ரா லோகேஷ் எப்போதும் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார். அவர் அதற்காக எதையும் செய்வார்- முதல் கணவர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகர் நரேஷை திருமணம் செய்து கொண்ட பவித்ரா லோகேஷ் ஆடம்பர வாழ்க்கைக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் என அவருடைய முதல் கணவர் பேட்டி அளித்துள்ளார்.

பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். இவர் பிரபல நடிகர் மைசூர் லோகேஷின் மகளாவார். பவித்ரா தனது 16ஆவது வயதில் கன்னட திரையுலகில் அறிமுகமானார். இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவிலும் துணை நடிகையாக நடித்துள்ளார். சில படங்களில் அம்மா, அக்கா கேரக்டர்களில் நடித்துள்ளார். 9 ஆம் வகுப்பு படிக்கும் போதே தனது தந்தையை இழந்த பவித்ரா குடும்ப வறுமை காரணமாக சினிமாவில் நடிக்க வந்தார்.

சாப்ட்வேர் என்ஜீனியர்

சாப்ட்வேர் என்ஜீனியர்

இவர் சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் நடிகர் சுச்சேந்திர பிரசாத்துடன் மலர்ந்த காதலால் சாப்ட்வேர் என்ஜீனியரை விவாகரத்து செய்தார். பிரசாத்தை திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் 2018 ஆம் ஆண்டு வரை வாழ்ந்து வந்தார் பவித்ரா. 2021 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நரேஷுடன் காதல் கொண்டார்.

நரேஷ் பாபு

நரேஷ் பாபு

தெலுங்கு நடிகர் நரேஷ் பாபுவுக்கு ஏற்கெனவே 3 முறை திருமணமாகிவட்டது. எனினும் அவர் பவித்ராவை தற்போது 4ஆவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணத்திற்கு முன்னர் மைசூரில் ஒரு ஹோட்டலில் பவித்ராவுடன் நரேஷ் தங்கியிருந்த நிலையில் அவர்களை 3ஆவது மனைவி ரம்யா ரகுபதி கையும் களவுமாக பிடித்தார். எனினும் அறையை விட்டு வெளியே வந்த போது விசில் அடித்து ரம்யாவை வெறுப்பேறறினார். ஆத்திரமடைந்த ரம்யா, நரேனை செருப்பால் அடிக்க பாய்ந்தார்.

ரம்யா கோபம்

ரம்யா கோபம்

போலீஸார் ரம்யாவை தடுத்தனர். என்ன நடந்தாலும் பவித்ராவை திருமணம் செய்து கொள்வேன் என சவால் விட்டிருந்தார் நரேஷ். கடந்த புத்தாண்டு அன்று இருவரும் இந்த ஆண்டில் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என கூறியிருந்தனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அடுத்த நாளே துபாய்க்கு ஹனிமூனுக்கு சென்றனர்.

சுச்சேந்திர பிரசாத்

சுச்சேந்திர பிரசாத்

இந்த நிலையில் பவித்ராவின் முதல் கணவர் சுச்சேந்திர பிரசாத் தனது மவுனத்தை கலைத்து பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறார். அந்த வாழ்க்கைக்காக அவர் எதையும் செய்வார். அவர் ஒரு சந்தர்ப்பவாதி. நரேஷின் விஷயத்தில் வித்தியாசமான பிளான் போட்டுள்ளார். நரேஷின் ரூ 1500 கோடி சொத்தை அபகரிக்க நடிகர் நரேஷுடன் திருமணம் என்ற நாடகத்தை நடத்தியுள்ளார்.

 விவாகரத்து செய்தது ஏன்?

விவாகரத்து செய்தது ஏன்?

பணத்துக்காக என்னை விவாகரத்து செய்தார் பவித்ரா. நரேஷுக்கு இது இன்னும் புரியவில்லை. என்றாவது ஒரு நாள் தெரிந்து கொள்வார் என சுச்சேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். 3ஆவது மனைவி ரம்யாவை நரேஷ் சட்டபடி விவாகரத்து செய்யவில்லை. அவரிடம் விவாகரத்து கேட்ட போது அவர் சம்மதிக்கவில்லை. இதனால் என்ன நடந்தாலும் பரவாயில்லை என கருதிய நரேஷ், பவித்ராவை திருமணம் செய்து கொண்டார் என்கிறார்கள். 60 வயதில் நரேஷுக்கு 4ஆவது திருமணம் தேவையா என ரசிகர்கள் முகம் சுளிக்கிறார்கள். மேலும் திருமணம் முடிந்த அடுத்த நாளே ஹனிமூனுக்கு பறந்தது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் பவித்ராவின் கணவர் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை கிளப்பியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+