Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோர்டில் அனல் பறந்த வாதம்.."நீங்க செஞ்சது தப்பு.. வழக்கே நிக்காது! சந்திரபாபு நாயுடு தரப்பு பரபர

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ரூ.300 கோடி ஊழல் புகாரில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சில முக்கிய வாதங்களை முன்வைத்தார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் சந்திரபாபு நாயுடு. கடந்த 2019ஆம் ஆண்டு வரை ஆந்திர முதல்வராக இருந்த அவர் மீது இப்போது ஊழல் புகார் முன்வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், அவர் எஸ்பிஜி சிறப்பு பாதுகாப்பில் இருப்பதால் அவரை காலை 5.30 மணி வரை கைது செய்ய முடியாது. இதையடுத்து காத்திருந்த போலீசார் காலை 5.30 மணிக்கு அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

 What Chandrababu Naidu Told Court alleged ₹ 300-crore Skill Development Corporation scam

சந்திரபாபு நாயுடு: தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் விஜயவாடா ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அரசியல் ரீதியான காரணங்களுக்காக தன் மீது பொய்யான புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும் இதனால் தனது குற்றச்சாட்டுகளை நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17-A பிரிவின்படி அரசு அதிகாரி அல்லது மக்கள் பிரதிநிதி ஒருவரைப் பதவிநீக்கம் செய்ய நடத்தப்படும் விசாரணை என்பது அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்யத் தகுதியான நபரின் அனுமதியைப் பெற்ற பின்னரே நடத்தப்பட வேண்டும்.

வழக்கறிஞர்கள் வாதம்: சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக இருந்தபோது இந்த ஊழல் நடந்ததாகக் கூறப்படுகிறது. முதல்வரைப் பதவியில் இருந்து நீக்குபவர் அதாவது இங்கே ஆந்திரப் பிரதேச ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு வழக்குத் தொடர்ந்து இருக்க வேண்டும். ஆனால், ஆளுநரிடம் இருந்து உரிய அனுமதி பெறாமல் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர். எனவே இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும்.

அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றங்கள் கொள்கை ரீதியான முடிவு.. அவை மாநில அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கை முடிவுடன் தொடர்புடையது. இது மாநில அரசின் முடிவாகும், எனவே, கிரிமினல் நடவடிக்கைகளைத் தொடங்கி இதைக் கேள்வி எழுப்ப முடியாது. தொழில் முனைவோர் துறைக்கு மாநில அரசு ஒதுக்கிய ரூ.360 கோடி தொடர்பாக இந்த புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2015-16ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டிலும் இருந்தது.

கிரிமினல் நடவடிக்கை தவறு: சட்டசபையிலும் இது முறையாக நிறைவேற்றப்பட்டது என்பதால் கிரிமினல் விசாரணையைத் தொடங்கி இதை விசாரிக்க முடியாது. இது குறித்த புகாரில் சந்திரபாபு நாயுடுவின் பெயரை யாரும் குறிப்பிடவில்லை. மேலும், இது குறித்துக் கடந்த 2021 டிசம்பர் 9ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் அறிக்கையிலும் சந்திரபாபு நாயுடு பெயர் இல்லை.

இந்த நிதியை முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது என்ற புகார் எழுந்தால் அதை முறையாக விசாரிக்க வேண்டும். இதற்காக முன்னாள் முதல்வர் ஒருவர் மீது வழக்குத் தொடுப்பது சரியானது இல்லை" என்று சந்திரபாபு நாயுடு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+