இது 3வது முறை! பிரதமர் மோடியை வரவேற்காமல் புறக்கணித்த கேசிஆர்! 2 பேர் இடையே என்னதான் பிரச்சனை?
ஐதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்தில் சென்றுள்ள நிலையில் இன்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அவரை வரவேற்காமல் புறக்கணித்தார். கடந்த 6 மாதத்தில் மட்டும் இது 3வது புறக்கணிப்பாகும். பிரதமர் மோடி, சந்திரசேகரராவ் இடையே நடந்தது என்ன? என்பது பற்றிய முழுதகவல் வருமாறு:
ஐதராபாத்தில் இன்றும் நாளையும் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட முன்னணி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இன்று மதியம் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. நாளை பாஜக சார்பில் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடியை வரவேற்காத கேசிஆர்
இதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு ஐதராபாத் சென்றார். வழக்கமாக பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் ஒரு மாநிலத்துக்கு சென்றால் அவர்களை முதல் அமைச்சர்கள் வரவேற்பது வழக்கம். அதன்படி இன்று தெலங்கானா முதல் அமைச்சரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவருமான சந்திர சேகரராவ்(கேசிஆர்) வரவேற்கவில்லை. அவரது சார்பில் அமைச்சர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார்.

ஜனாதிபதி வேட்பாளருக்கு வரவேற்பு
அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா தனக்கு ஆதரவு கோரி தெலங்கானா மாநில கட்சி தலைவர்களை சந்திக்க இன்று ஐதராபாத் சென்றார். அவரை சந்திர சேகரராவ் வரவேற்றார். பிரதமர் நரேந்திர மோடி வருவதற்கு முன்பு ஐ தரபாத் விமான நிலையம் வந்த யஷ்வந்த் சின்ஹாவை சிரித்த முகத்துடன் சந்திர சேகரராவ் வரவேற்றார்.

3வது முறையாக புறக்கணிப்பு
தெலங்கானா வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்காமல் சந்திர சேகரராவ் புறக்கணிப்பது என்பது முதல் முறையல்ல. இது 3வது முறையாகும். அதாவது இன்றுடன் சேர்த்து கடந்த 6 மாதத்தில் மட்டும் பிரதமர் மோடி 3 முறை தெலங்கானா வந்துள்ளார். ஏற்கனவே பிரதமர் மோடியை 2 முறை வரவேற்காத சந்திர சேகரராவ் இன்று 3வது முறையாக புறக்கணிப்பு செய்துள்ளார்.

இதற்கு முன் நடந்தது என்ன?
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ஐதராபாத்தில் சமத்துவத்துக்கான 216 அடி உயரம் கொண்ட ஐம்பொன் ராமானுஜர் சிலையை திறந்து வைத்தார். அப்போதும் பிரதமர் மோடியை வரவேற்காத சந்திரசேகரராவ், அந்த விழாவையும் புறக்கணித்தார். அதன்பிறகு இந்தியன் ஸ்கூட் ஆப் பிஸ்னஸ் (ஐஎஸ்பி) 20வது ஆண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அப்போது சந்திர சேகரராவ் பிரதமர் மோடியை வரவேற்காமல் பெங்களூர் சென்றார். அதற்கு முன்பு சிலை திறப்பு விழாவில் அவர் பங்கேற்கவில்லை.

காரணம் என்ன?
தெலங்கானா மாநிலத்துக்கு நெல் கொள்முதல் செய்த விவகாரத்தில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை பின்பற்றியதாக சந்திரசேகரராவ் கூறினார். மேலும் நிவாரணம், ஜிஎஸ்டி தொகை வழங்குவதிலும் தெலங்கானா புறக்கணிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். இதன் தொடர்ச்சியாக தான் பிரதமர் மோடியையும், பாஜக அரசையும் சந்திர சேகரராவ் விமர்சனம் செய்து வருகிறார்.

3வது அணி அமைக்க முடிவு
மேலும் 2024 மக்களவை பொதுத்தேர்தலுக்கா தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து 3வது அணி திரட்ட சந்திரசேகரராவ் ஈடுபட்டு வருகிறார். இதற்கான வியூகங்களை அவர் வகுத்து வருவதோடு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதன்காரணமாக தான் சந்திர சேகரராவ்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதை புறக்கணித்து வருகிறார்.

பேனர்-டுவிட்டரில் எதிர்ப்பு
மேலும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதரபாத்தில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், ByeBye Modi எனும் ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications