For Quick Alerts
For Daily Alerts
Just In

டெல்லியில் இரவு 9.30 மணி வரை நீடித்த வாக்குப் பதிவு

டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் ஆர்வம் காட்டினர். மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடையும் என்றாலும் பல வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசைகளில் வாக்காளர்கள் காத்திருந்தனர்.
டெல்லி முழுவதும் ஏறத்தாழ 1 லட்சத்து 72 ஆயிரம் வாக்காளர்கள் இதேபோல் காத்திருந்ததாக மதிப்பிடப்பட்டது. இதனால் வாக்குப் பதிவு நேரத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதன்படி மாலை 5 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஒக்லா தொகுதியில் ஏராளமான வாக்காளர்கள் காத்திருந்ததால் அங்கு இரவு 9.30 மணி வரை வாக்குப் பதிவு நீடித்தது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Reflecting a strong enthusiasm among voters in Delhi assembly poll, an estimated 1.7 lakh people were in the queue after the deadline for voting ended at 5pm, following which the Election Commission decided to continue voting even if it goes on till late in the evening. The Election Commission said polling drew to a close at Okhla constituency at around 9.30 PM.
Story first published: Thursday, December 5, 2013, 8:17 [IST]