17 சிறுபான்மையினர் கொன்று எரிப்பு.. குஜராத் கோத்ரா கலவர வழக்கில் 22 பேர் விடுதலை.. ஆதாரமில்லையாம்
2002 குஜராத் கோத்ரா கலவரத்தில் 17 பேரை கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரை குஜராத் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
காந்திநகர்: குஜராத்தில் கடந்த 2002ல் ஏற்பட்ட கோத்ரா கலவரத்தில் 2 குழந்தைகள் உள்பட 17 சிறுபான்மையினரை கொலை செய்து உடல்களை தீயிட்டு எரித்ததாக 22 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம் ஆதாரங்கள், சாட்சியங்கள் இல்லை எனக்கூறி 22 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.
குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டில் பயங்கரமான கலவரம் நடந்தது. 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம்தேதி குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு சபர்மதி ரயிலுக்கு தீவைக்கப்பட்டது. இதில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். இது பெரிய கலவரமாக மாறியது.
கோத்ரா உள்பட குஜராத்தின் பல இடங்களில் கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

22 பேர் அதிரடி கைது
இந்த கலவரம் குஜராத் மாநிலம் திலோல் கிராமத்துக்கும் பரவியது. இங்கு வசித்து வந்த சிறுபான்மையினத்தை சேர்ந்த மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. 2 குழந்தைகள் உள்பட மொத்தம் 17 பேரை ஒரு கும்பல் கொன்றதோடு உடல்களை தீயிட்டு எரித்தது. இந்த சம்பவம் 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ம் தேதி நடந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீதிபதி தீர்ப்பு
இதுதொடர்பான வழக்கு பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள ஹலால் டவுனில் அமைந்திருக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அதன்மீதான விசாரணைகள் நடைபெற்று வந்தன. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ் திரிவேதி தீர்ப்பு வழங்கினார்.

ஆதாரங்கள் இல்லை என விடுதலை
அப்போது குற்றம்சாட்டப்பட்ட 22 பேர் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய அளவிலான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லை எனக்கூறி 22 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த 17 பேர் படுகொலை சம்பவத்தில் பின்னடைவு ஏற்பட்டது ஏன் என்பது பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது.

வழக்கு பின்னடைவு ஏன்?
அதாவது சம்பவம் நடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தான் வழக்கு தொடரப்பட்டு கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர். மேலும் கொலை செய்யப்பட்டதாக கூறும் நபர்களின் உடல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் நதியின் கரையோரம் கிடந்த எலும்பு கூடுகளை கைப்பற்றி போலீசார் ஆதாரமாக தெரிவித்தனர். இதனை நீதிமன்றம் ஏற்க மறுத்த நிலையில் தான் ஆதாரமில்லை என தற்போது அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை காலத்தில் 8 பேர் இறப்பு
இதுபற்றி குற்றம்சுமர்த்தப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் கோபால் சிங் கூறுகையில், ‛‛மொத்தம் 22 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் 8 பேர் வழக்கு விசாரணையின்போது இறந்துவிட்டனர். தற்போது 22 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது'' என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications