செம்மர கடத்தல் விவகாரம்: ஆந்திராவில் 240 தமிழர்கள் கைது!!
ரேணிகுண்டா: தமிழகத்தைச் சேர்ந்த செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்கள் 240 பேர் ஆந்திராவின் ரேணிகுன்டா ரயில்நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருப்பதி அருகே சேஷாசலம் மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஆந்திரப் பிரதேச வனத்துறை அதிகாரிகளும், மரக்கடத்தல் தடுப்பு சிறப்பு போலீஸ் படையினரும் இணைந்து நடத்திய என்கவுன்ட்டர் நடவடிக்கையில் செம்மரக் கடத்தல்காரர்கள் 3 பேர் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். செம்மரக் கடத்தலை ஒழிப்பதற்காக அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்துவரும்நிலையில் என்கவுன்ட்டர் செய்யப்படும் அச்சத்தால் சேஷாசலம் மலைப்பகுதி காட்டுக்குள் பதுங்கியிருந்த செம்மரக் கடத்தல்காரர்களும், மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களும் அங்கிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடப்பா மாவட்டம் கோடூர் பகுதியில் ஒரு மாந்தோப்பில் தஞ்சம் புகுந்த தமிழகத்தைச் சேர்ந்த 240 செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்கள் சனிக்கிழமை அங்கிருந்து புறப்பட்டு கோடூர் ரயில் நிலையத்தை அடைந்தனர். அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்ட மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் காச்சிகுடா- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸில் அவர்கள் ஏறிக்கொண்டனர். சென்னை வந்தடைந்தவுடன் தங்களது ஊருக்குத் திரும்புவதற்கு அவர்கள் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே கோடூர் ரயில் நிலையில் பணியிலிருந்த ரேணிகுன்டா சரக காவல்துறை ஆய்வாளர் பி.மது சந்தேகத்துக்குரிய வகையில் நூற்றுக்கணக்கானவர்கள் மும்பை எக்ஸ்பிரஸிலும், காச்சிகுடா சென்னை எக்ஸ்பிரஸிலும் ஏறிச் செல்வதாக உள்ளூர் போலீஸாருக்கும் செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புப்படையினருக்கும் தகவல் அளித்தார்.
இதையடுத்து ரேணிகுன்டா ரயில்நிலையத்துக்கு விரைந்து சென்ற சிறப்புப்படையினர் அங்கு வந்தடைந்த மும்பை மற்றும் காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில்களை சோதனையிட்டு அதில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த 230 செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களை கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications