கொடுமை..12 வயது சிறுமியை கூட்டாக பலாத்காரம் செய்த 3 சிறுவர்கள்.. சோஷியல் மீடியாவில் வீடியோ

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டிய 3 சிறுவர்கள், வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இவ்வழக்கில் 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வரும் நிலையில் இதனை தடுக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

புகார்

புகார்

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறியதாவது, "ஜாஜ்பூர் மாவட்டத்தின் ஜெனாபூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் எங்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். புகாரில் தனது 12 வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அதனை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைத்தள ஊடகங்களில் பதிவேற்றம் செய்ததாகவும் கூறியிருந்தார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் புகார் உண்மை என்று தெரிய வந்தது. உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேட தொடங்கினோம்.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

சிறுமியிடம் இது குறித்து விசாரிக்கப்பட்டது. விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் என்றும் அவர்கள் அனைவருமே 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் என்பதும் உறுதியானது. சில நாட்களுக்கு முன்னர் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று இந்த மூன்று பேரும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். மட்டுமல்லாது அதனை தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர்.

மிரட்டல்

மிரட்டல்

இது நடந்து சில நாட்கள் ஆகியுள்ளது. பின்னர் இந்த சிறுவர்கள் சிறுமியிடம் ரூ.20,000 ஆயிரத்தை கேட்டிருக்கிறார்கள். ஆனால் சிறுமி இதனை கொடுக்க மறுத்துள்ளார். பின்னர் இந்த வீடியோவை சிறுவர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர். ஓரிரு நாளில் வீடியோ சிறுமியின் உறவினர் கைக்கு வந்துள்ளது. இதை உறவினர் சிறுமியின் தந்தையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதை பார்த்து அதிர்ந்துபோன தந்தை சிறுமியிடம் விசாரித்துள்ளார்.

கைது

கைது

அப்போதுதான் சிறுமி அனைத்து விஷயங்களையும் கூறியுள்ளார். இதனையடுத்து கொடுக்கப்பட்ட புகாரில் சிறுவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரில் ஒருவர் பொறியியல் டிப்ளமோ படித்து வருகிறார்." என காவல்துறையினர் கூறியுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடரும் வன்முறைகளை தடுத்து நிறுத்த உறுதியான சட்டங்களுடன் போதிய அளவிலான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+