மனநலமற்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை.. குழாயால் தாக்கி கொல்ல முயற்சி.. மேற்கு வங்கத்தில் கொடூரம்
மேற்கு வங்கத்தில் மனநலம் சரியல்லாத பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு பின் மரணம் அடையும் அளவிற்கு தாக்கப்பட்டு இருக்கிறார்.
Recommended Video

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மனநலம் சரியல்லாத பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு பின் மரணம் அடையும் அளவிற்கு தாக்கப்பட்டு இருக்கிறார். தற்போது இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மிகவும் தாமதமாகவே இவர் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார். இதனால் இவரது உடல் நிலை இப்போது மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் மேற்கு வங்கத்தின் தினாஜ்புர் என்ற பகுதியில் நடந்து இருக்கிறது. போலீஸ் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

நடந்தது என்ன
தினாஜ்புர் பகுதியில் இருக்கும் காட்டுப்பகுதி ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 4 பேர் சேர்ந்த அந்த 35 வயது மனநலமற்ற பெண்ணை வன்புணர்வு செய்து இருக்கிறார்கள். மேலும் இருப்புக் கம்பியால் மோசமாக உடல் முழுக்க தாக்கி உள்ளனர்.

போராட்டம்
அவர் மரணம் அடைந்துவிட்டார் என்று நினைத்து அந்த நான்கு பேரும் அங்கிருந்து சென்றுள்ளனர். ஆனால் 30 மணி நேரம் அங்கேயே உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார். சனிக்கிழமை மதியம் தொடங்கி மறுநாள் இரவு வரை அங்கேயே இருந்துள்ளார்.

சிகிச்சை
அதுவழியாக வந்த மலைப்பகுதி மக்கள், அந்த பெண்ணை காப்பாற்றி இருக்கிறார்கள். போலீசுக்கும், மருத்துவமனைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தற்போது அவர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிரடி
இந்த சம்பவத்தில் மொத்தம் 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட ராம் பிரசாத் சர்மா, அகாலு பர்மா ஆகியோர் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். இன்னும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications