For Quick Alerts
For Daily Alerts
Just In
மும்பை கடலில் படகு கவிழ்ந்து 4 குழந்தைகள் பலி... 25 பேர் மீட்பு
மும்பை கடலில் படகில் பயணம் செய்த பள்ளி குழந்தைகள் படகு கவிழ்ந்ததில் 4 பேர் பலியாகிவிட்டனர்.
மும்பை: மும்பை கடலில் படகில் பயணம் செய்த பள்ளி குழந்தைகள் படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலியாகிவிட்டனர். 25 பேர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.
மும்பையின் தகானு கடற்கரையில் பள்ளியை சேர்ந்த 40 குழந்தைகள் படகில் சுற்றுலா சென்றனர். அப்போது கடலில் இருந்து 3.7 கி.மீட்டர் தூரத்தில் படகு கவிழ்ந்தது.
இதில் 4 குழந்தைகள் பலியாகிவிட்டனர். மீதமுள்ளவர்களில் 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணிகள் நடைபெறுகின்றன. குழந்தைகளை தேடுவதற்காக படகுகள் ஈடுபட்டுள்ளன.
டோர்னியர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
#NewsAlert | A boat carrying 40 students in #Dahanu capsizes in the sea. Rescue operations in progress. pic.twitter.com/q208NM8NDs
— Mumbai Mirror (@MumbaiMirror) January 13, 2018
Comments
English summary
4 school children died and as many as 25 of them were rescued after a boat capsized in Maharashtra's Sea shore.