வெறிச்செயல்! 11 வயது மாணவனை கொலை செய்த 13 வயது சக மாணவன்.. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
சண்டிகர்: ஹரியானாவில் மாணவர் ஒருவர் படிக்க விரும்பாத காரணத்தினால், சக மாணவரை கழுத்து நெறித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். மதராசாவில் இந்த கொலை நிகழ்த்தப்பட்டுள்ளதால் இதர மாணவர்கள் மத்தியில் அச்சம் மேலோங்கியுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட மாணவர் சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

சிறுவன் படுகொலை
ஹரியானா மாநிலம் நூஹ் எனும் இடத்தில் இஸ்லாமிய கல்வி மையம் (மதராஸா) ஒன்று அமைந்துள்ளது. இதில் 11 வயது சிறுவன் ஒருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த காவல்துறை இது கொலை என்பதை உறுதி செய்தனர். மேலும், டெட் கிராமத்தில் வசிக்கும் சமீர் எனும் மாணவன்தான் உயிரிழந்துள்ளதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கொலை செய்தது யார் என்பது குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

திட்டம்
விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டது 13 வயது சிறுவன் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இவர்கள் இருவரும் இதே மதராஸாவில் ஒன்றாக கல்வி பயின்று வந்ததும், இவர்கள் நண்பர்கள் என்பதும் கொலை செய்த மாணவன் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். வெள்ளிக்கிழமை கொலை செய்ய முதலில் திட்டம் தீட்டப்பட்டதாகவும், ஆனால் அன்று தொழுகைக்கு அதிக கூட்டம் வந்ததால் சனிக்கிழமை கொலையை செய்ததாக சக மாணவன் ஒப்புக்கொண்டுள்ளார்.

கொலை
முதலில் இந்த கொலை சம்பவத்தில் மாணவன் மீது எந்த சந்தேகமும் எழவில்லை. ஆனால் மாணவர்களிடையே விசாரித்ததில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. சம்பவத்தன்று மதரஸாவின் கீழ்த்தளத்தில் உள்ள அறைக்கு சமீரை சக மாணவன் அழைத்து சென்றுள்ளார். பின்னர் சமீரின் கழுத்தை நெறித்து கொன்று உடலை மண்ணில் புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. செப்.3ம் தேதி இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. செப்.5ம் தேதி சமீரின் உடல் மீட்கப்பட்டது.

விசாரணை
கொலைக்கான நோக்கம் குறித்து விசாரிக்கையில், தான் தொடர்ந்து படிக்க விரும்பாததால்தான் இந்த கொலையை செய்துள்ளதாக சக மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார் என நூஹ்வின் காவல்துறை கண்காணிப்பாளர் வருண் சிங்லா கூறியுள்ளார். படிப்பது பிடிக்காததால் சக மாணவனை, மாணவன் ஒருவன் கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications