என்ன அவார்டா கொடுக்குறாங்க.. நோயாளி போல நடித்த 410 பேர்.. நிஜ வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்கள்!
மத்திய பிரதேசத்தில் இருக்கும் சர்வபிள்ளை ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் 410 பேர் போலியாக நோயாளி போல நடித்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
போபால்: மத்திய பிரதேசத்தில் இருக்கும் சர்வபிள்ளை ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் 410 பேர் போலியாக நோயாளி போல நடித்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அகில இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய சோதனையில் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவ நிர்வாகமே இந்த மோசமான செயலை செய்து இருப்பதாக தெரிய வந்து இருக்கிறது. மேலும் அந்த 410 பேருக்கும் மருத்துவமனை அங்கு நோயாளி போல நடிக்க பணம் கொடுத்து உள்ளது.
இந்த மோசமான செயலை செய்ததற்கு பின் மிக முக்கியமான காரணம் இருப்பது தெரிய வந்து உள்ளது. தற்போது அந்த மருத்துவமனை நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

ஆய்வு
அகில இந்திய மருத்துவ கவுன்சில் சில நாட்களுக்கு முன் போபாலில் இருக்கும் சர்வபிள்ளை ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் திடீர் ஆய்வில் ஈடுபட்டது. அந்த மருத்துவமனையிலும், அதற்கு சொந்தமான மருத்துவ கல்லூரியிலும் இந்த சோதனை நடந்தது. அப்போது அங்கு சில நோயாளிகள் பொய்யாக நடிப்பதாக கவுன்சிலுக்கு சந்தேகம் வந்தது. மொத்தமாக 400க்கும் அதிகமான நோயாளிகள் உண்மையில் நோயாளிகளே இல்லை என்று கவுன்சில் கருதி இருக்கிறது.

நீதிமன்றம் ஆணை
மருத்துவ கவுன்சில் இதையடுத்து அந்த மருத்துவமனை மீது வழக்கு தொடுத்தது. நீதிமன்றம் சிபிஐயை சேர்ந்த முன்னாள் அதிகாரி ஒருவரையும், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இருவரையயும் உள்ளடக்கிய குழு ஒன்றை உருவாக்கி, இந்த விஷயத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டது. கடந்த சில நாட்களாக அந்த மருத்துவமனையிலும், கல்லூரியிலும் தீவிரமாக சோதனையும், விசாரணையும் நடந்தது. இதில் 410 பேர் பொய்யாக நோயாளியாக் நடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காரணம் என்ன
மருத்துவமனையின் இந்த செயலுக்கு பின் முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. மருத்துவமனைக்கு சொந்தமான அந்த கல்லூரிக்கு, நிறைய மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வாங்கவே இப்படி செய்யப்பட்டு இருக்கிறது. நிறைய நோயாளிகள் என்று கணக்கு காட்டினால் நிறைய மருத்துவ சீட்கள் வாங்க முடியும் என்று இவ்வளவு மோசமான செயலில் ஈடுபட்டு இருக்கிறது.

சோதனை நடக்கும்
தற்போது நீதிமன்றம் இந்த விஷயத்தில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி அந்த கல்லூரியிலும் மருத்துவமனையிலும் இன்னும் தீவிர சோதனை நடத்த வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கை, அங்கு வேலை பார்ப்பவர்களின் விவரம், ஆசிரியர்களின் பின்புலம் என அனைத்தும் சேகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த தகவல்களை சேகரித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த குழுவிற்கு நீதிமன்றம் ஆணையிட்டு இருக்கிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications