'விமானங்களை பாகிஸ்தானுக்கு கடத்த போறேன்' .. ம.பி.யை கலங்கடித்த இளைஞர்.. அலேக்கா தூக்கிய போலீசார்!

Subscribe to Oneindia Tamil

போபால்: விமானங்களை கடத்தி பாகிஸ்தானுக்கு கொண்டு போக போகிறேன் என்று இளைஞர் மிரட்டல் விடுத்ததால் மத்திய பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலைய அதிகாரிகள் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்தது.

மர்ம நபர் மிரட்டல்

மர்ம நபர் மிரட்டல்

எதிர்முனையில் பேசிய மர்ம நபர் ஒருவர், ''மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் இந்தூர் விமான நிலையங்களில் இருந்து விமானங்களை கடத்த போகிறேன். அந்த விமானஇந்த பாகிஸ்தானுக்கு கொண்டு செல்ல போகிறேன்'' என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.

பலத்த சோதனை

பலத்த சோதனை

உடனடியாக போபால் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்தூர் விமான நிலையத்திலும் சோதனைகள் கடுமையாக்கப்பட்டன. அங்கு புறப்பட இருந்த விமானங்கள், வந்து சேர்ந்த விமானங்களில் பலத்த சோதனை நடத்தப்பட்டது.

பலத்த பாதுகாப்பு

பலத்த பாதுகாப்பு

இது தவிர பயணிகளிடமும் விவரங்கள் சேகரித்து தீவிர சோதனை நடத்தப்பட்டது. இது ஒருபக்கம் இருக்க, அந்த மர்ம நபர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அப்போது போனில் பேசியது சுஜல்பூர் நகரத்தை சேர்ந்த 34 வயதுடைய நபர் என்பது தெரியவந்தது. போலீசார் உடனடியாக அந்த நபரை பிடித்தனர்.

 இளைஞர். பிடிபட்டார்

இளைஞர். பிடிபட்டார்

விமானத்தை கடத்துவதாக கூறி மிரட்டல் விடுத்தது ஏன்? என்பது குறித்து அந்த நபரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இருந்த போதிலும் போபால், இந்தூரில் இருந்து கடுமையான பாதுகாப்பு சோதனைக்குப் பின்னரே விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+