எங்களுக்கு பெரிய வீடு வேண்டும் – குடைச்சல் தரும் "ஆம் ஆத்மி" எம்.பிக்கள்!
டெல்லி: சாமானிய மக்களின் கட்சி, சாமானிய மக்களுக்கான கட்சி என்று கூறி நாட்டில் பெரும் அலையை ஏற்படுத்திய ஆம் ஆத்மி கட்சி சார்பில் லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பிக்கள் இப்போது கேட்டு வருவது முரண்பட்ட காட்சியாக மாறியுள்ளது.
தங்களுக்கு அரசு ஒதுக்கும் வீடுகள் பெரிதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
லோக்சபாவில் நேற்று பேசிய ஆம்ஆத்மி எம்.பிக்கள் 3 பேர் தங்களுக்கு இப்போது அரசு அளித்துள்ள வீடு வசதியாகவும், போதுமானதாகவும் இல்லை எனவும், அதனால் தங்களுக்கு இதை விட நல்லதாகவும், பெரியதாகவும் உள்ள வீட்டை ஒதுக்கித்தர வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.
ஆம் ஆத்மியின் ஒரு எம்.பியான சாது சிங் தனக்கு அளிக்கப்பட்டுள்ள வீட்டை ஒரு ஸ்டோர் ரூம் என்று வர்ணித்துள்ளார். "அது வீடல்ல... ஒரு சிறிய ஸ்டோர் ரூம். 3 தடவை நான் வீட்டுவாரியத்துறைக்கு எழுதியும் அதற்கு சரியான பதிலில்லை" என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்வராக இருந்தபோது அவருக்கு அரசு பெரிய பங்களாவைக் கொடுத்திருந்தது. முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகும் கூட அவர் அதைக் காலி செய்யாமல் இருந்து வந்தார். தனது மகள் அரசுத் தேர்வை எழுதுவதால் அதுவரை தன்னை இங்கே தங்கியிருக்க அனுமதி கோரியிருந்தார்.
சமீபத்தில்தான் அவர் தனது வீட்டைக் காலி செய்து தனது பழைய வீட்டுக்குக் கிளம்பிப் போனார். இந்த நிலையில், அவரது அக்கட்சி எம்.பிக்கள் தங்களுக்கு பெரிய வீடு வேண்டும் என்ற கேட்டுள்ளது மத்தியில் புதிய சிக்கலை தோற்றுவித்துள்ளது.
ஓட்டுப் போட்ட மக்கள் சிறிய குடிசைகளிலும், பிளாட்பார்ம்களிலும் கஷ்டப்படும் நிலையில் மக்கள் பிரதிநிதிகளான இவர்களின் இந்த கோரிக்கைகளைக் கண்டு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications