'ஹரேன் பாண்டியா'..மோடியை குறி வைக்கும் ஆம் ஆத்மியின் அதிரடி பிளான்!
டெல்லி: பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை குறி வைத்து செயல்பட ஆம் ஆத்மி கட்சி திட்டம் தீட்டி வருகிறதாம்.
ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதில் முதல்கட்டமாக தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்டது.
இந்நிலையில் பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை குறி வைத்து செயல்பட ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டு வருகிறதாம். அக்கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் மோடியிடம் ட்விட்டரில் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்.

அதிலும் குறிப்பாக கடந்த 20003ம் ஆண்டு குஜராத் பாஜக தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான ஹரேன் பாண்டியா கொல்லப்பட்டது குறித்து யாதவ் மோடியிடம் கேள்வி கேட்டுள்ளார்.
இது குறித்த அவரது ட்வீட்,
பாஜக தலைவரும், குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சருமான ஹரேன் பாண்டியாவை யார் கொன்றது? 11 ஆண்டு காத்திருப்புக்கு பிறகும் அவரது குடும்பத்திற்கு நீதி கிடைக்குமா? குஜாராத் போலீசார் தெரிவித்த குற்றவாளிகளை ஏற்க நீதிமன்றம் மறுத்தது. இதையடுத்து ஏன் மறுவிசாரணை செய்யவில்லை? என்று கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications