விபத்தில் கால்களை இழந்த தமிழக மாணவிக்கு ரூ. 31 லட்சம் இழப்பீடு: உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வாகன விபத்தில் இரு கால்களையும் இழந்த தமிழக மாணவிக்கு ரூ.30.93 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவி வி.மேகலா, 10-ம் வகுப்பில் முதல் ரேங்க் எடுத்திருந்தார். கடந்த 2005-ல் நடந்த ஒரு வாகன விபத்தில் மேகலா இரண்டு கால்களையும் இழந்தார்.

Accident victim awarded Rs. 30 lakh compensation

நஷ்ட ஈடு கோரி அவர் தொடர்ந்த வழக்கில், அவருக்கு ரூ.6.46 லட்சம் வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, இழப்பீட்டுத் தொகை ரூ.18.22 லட்சமாக உயர்த் தப்பட்டது.

இந்தத் தொகை போதுமானதல்ல என்று கூறி, மேகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பு அளித்தது அதில் கூறியுள்ளதாவது:

வாகன விபத்தில் இழப்பீடு வழங்கும்போது, உடல் உறுப்புகளின் இழப்பை மட்டும் கருத்தில் கொள்ளக் கூடாது. பாதிக்கப்பட்டவரின் புத்திசாலித்தனம், அவரது எதிர்காலம், வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு, வேதனை ஆகியவற்றை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி, 10-ஆம் வகுப்பில் முதல் ரேங்க் எடுத்துள்ளார். அவர் தொழிற்கல்வி பயின்று அரசு அல்லது தனியார் வேலைக்குச் சென்றிருந்தால், நல்ல சம்பளம் பெற்றிருப்பார். எனவே, மாணவி மேகலாவுக்கு ரூ.30.93 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்படுகிறது. இந்தத் தொகையை 9 சதவீத வட்டியுடன் வழங்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+