திவாலான காரைக்கால் துறைமுகம் ஏலத்தில் யாருக்கு கிடைக்கும்? போட்டியில் வேதாந்தா, அதானி குழுமங்கள்!
காரைக்கால்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட காரைக்கால் துறைமுகத்தை ஏலம் எடுப்பதில் அதானி, வேதாந்தா குழுமங்கள் போட்டியில் உள்ளன.
காரைக்கால் துறைமுகம் கடனில் சிக்கி தவித்த நிலையில் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது காரைக்கால் துறைமுகம். இத்துறைமுகத்தின் நிலுவை கடன் தொகை ரூ2,960 கோடி. தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திவாலனதாக காரைக்கால் துறைமுகம் அறிவித்தது.

களத்தில் யார் யார்?
இதனையடுத்து காரைக்கால் துறைமுகம் ஏலத்துக்கு வந்தது. காரைக்கால் துறைமுக ஏலத்தில் கலந்து கொள்வதான டெண்டர்கள் கோரப்பட்டிருந்தன. காரைக்கால் துறைமுகத்தை முதலில் அதானி குழுமம்தான் ஏலம் எடுக்கும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில்தான் வேதாந்தா குழுமமும் (தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்) போட்டியில் களமிறங்கியது. அத்துடன் ஜேஎஸ்டபிள்யூ இன்பிரா, ஜிண்டால் பவர், ஆர்கேஜி பண்ட், சாகாசியஸ் கேபிடல் என மேலும் சில நிறுவனங்களும் போட்டி போட்டன. இந்த போட்டியில் ஏலதாரர்கள் 2 பேரை இறுதி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

காரைக்கால் துறைமுகம்
காரைக்கால் துறைமுகமானது அனைத்து காலநிலைகளையும் எதிர்கொள்ளக் கூடிய திறன் கொண்டது. புதுச்சேரி அரசு மற்றும் மார்க் நிறுவனம் இணைந்து இந்த துறைமுகத்தை நிர்வகித்து வந்தன. 2009-ம் ஆண்டு முதல் காரைக்கால் துறைமுகம் செயல்பாட்டு வந்தது. காரைக்கால் துறைமுகம் மூலம் ஆண்டுக்கு ரூ1,000 கோடி வருவாய் ஈட்டப்பட்டும் வந்தது. காரைக்கால் துறைமுகத்தில் 5 கப்பல்கள் நிறுத்த முடியும். சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு அடுத்த பெரிய துறைமுகம். நிலக்கரி, சர்க்கரை, சிமெண்ட் உள்ளிட்ட சரக்குகளை காரைக்கால் துறைமுகம் கையாண்டு வந்தது. ஆனாலும் நிலக்கரி இறக்குமதிதான் காரைக்கால் துறைமுகத்தின் பிரதானமாக இருந்தது.

நிலக்கரி
காரைக்கால் துறைமுகத்தின் நிலக்கரி இறக்குமதி, வெளி இடங்களுக்கு அனுப்புவது ஆகியவற்றால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதாக சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து ரூ600 கோடியில் துறைமுகத்தை இயந்திரமயமாக்கும் நடவடிக்கையை நிர்வாகம் மேற்கொண்டிருந்தது. மேலும் காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி கையாளப்பட்டதன் மூலமாக திருச்சி கோட்ட ரயில்வேயும் வருவாய் ஈட்டியது.

யாருக்கு போகும்?
காரைக்கால் துறைமுகத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர். இத்துறைமுகத்துக்காக இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் என பல வங்கிகளிடம் இருந்து கடன்பெறப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அதானி அல்லது வேதாந்த குழுமம் ஆகியவற்றில் ஒன்றின் வசம் காரைக்கால் துறைமுகம் செல்லக் கூடும் என்கின்றன தகவல்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications