கல்பர்கி படுகொலையைத் தொடர்ந்து... எழுத்தாளர் கே.எஸ்.பக்வானுக்கும் மிரட்டல் கடிதம்
பெங்களூரு: பிரபல எழுத்தாளர் கல்பர்கி கொல்லப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்கு முன்னதாகவே, மற்றொரு எழுத்தாளரான கே.எஸ்.பக்வானுக்கும் கடிதம் வாயிலாக மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தார்வாரை சேர்ந்த எழுத்தாளர் எம்.எம்.கல்பர்கி. புரட்சிகரமான கன்னட எழுத்தாளராகிய கல்பர்கி, கன்னட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமாவார். கடந்த மாதம் 30ம் தேதி காலை மர்ம நபர்கள் சிலர் கல்பர்கியை அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொலை செய்தனர். இந்தப் படுகொலை சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கல்பர்கி கொல்லப்பட்ட சில மணி நேரங்களிலேயே மங்களூரைச் சேர்ந்த பஜ்ரங்தள் அமைப்பு ஆதரவாளர் புவித் ஷெட்டி என்பவர் தனது டிவிட்டர் தளத்தில், "இந்துத்துவாவை மோசமாக பேசிய எழுத்தாளர்களான அனந்தமூர்த்தி மற்றும் கல்புர்கி ஆகியோர் நாய்களைப் போல் இறந்தனர். அடுத்தது பக்வான்தான்" என பதிவிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது எழுத்தாளர் கே.எஸ்.பக்வானுக்கு கடிதம் வாயிலாக மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை, பக்வான் வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது மனைவி பெற்றுள்ளார். பின், இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மிரட்டல் கடிதம் குறித்து பக்வான் கூறுகையில், ‘இத்தகைய மிரட்டல் கடிதம் வருவது எனக்கு ஒன்றும் புதிதல்ல. நான் இதற்கெல்லாம் அஞ்சமாட்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications