சர்ச்சையில் நாளந்தா பல்கலை நிதி. வேந்தர் பதவியில் இருந்து விலகுவதாக அமர்த்தியா சென் மிரட்டல்!
டெல்லி: சர்வதேச நாளந்தா பல்கலைக் கழகத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகுவேன் என்று அதன் வேந்தராக இருக்கும் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் எச்சரித்துள்ளார்.
குப்த மன்னர்கள் காலத்தில் பீகாரில் நாளந்தா பல்கலைக் கழகம் பெரும் புகழுடன் விளங்கியது. ஏராளமான வெளிநாட்டினரும் நாளந்தா பல்கலைக் கழகத்துக்கு வந்து கல்வி கற்று சென்றனர். பின்னர் வெளிநாட்டு மன்னர்கள் படையெடுப்பால் இந்த பல்கலைக் கழகம் சிதைவை சந்தித்தது.
இதே பெயரில் சர்வதேச பல்கலைக் கழகம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த பல்கலைக் கழகம் தொடங்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது.

ஆனால் இன்னமும் இந்த பல்கலைக் கழகத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடையாமல் டெல்லியில் சிறப்பு அலுவலகம் செயல்பட்டும் வருகிறது.
இந்த பல்கலைக் கழகத்துக்கான செலவினம் இப்போது பெரும் சர்ச்சையை உருவாக்கி வைத்துள்ளது. பல்கலைக் கழகத்தின் வேந்தர் அமர்த்தியா சென் உட்பட நிர்வாகக் குழுவினருக்கு ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் அமெரிக்க டாலர் ஊதியமாக வழங்கப்படுகிறது. பேராசிரியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 50ஆயிரம் டாலர்கள் ஊதியமாக வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக நிதி அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் இந்த விசாரணைக்கு வேந்தர் அமர்த்தியா சென் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபோன்று விசாரணைகளை நடத்தினால் தாம் வேந்தர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் நாளந்தா பல்கலைக் கழகம் தன்னாட்சி பெற்றது எனில் முழுமையான நிதி சுதந்திரமும் அதற்கு இருக்கிறது என்பது பல்கலைக் கழகத்தினர் வாதம். இந்த விவகாரத்தில் விரைவில் மத்திய அரசு முடிவெடுத்து முக்கிய அறிவிப்பை வெளியிடக் கூடும் எனத் தெரிகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications