Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆந்திரா: ஜெகனைவிட ஸ்பீடு காங்கிரஸ்..தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவுக்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திரா சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுவேகமாக களமிறங்கிவிட்டது. ஆந்திரா சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கட்டணங்களை அம்மாநில மேலிடப் பொறுப்பாளரான தமிழ்நாட்டை சேர்ந்த எம்பி மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார்.

ஆந்திரா சட்டசபை மற்றும் லோக்சபாவுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திராவில் தற்போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திரா தேர்தல் களத்தில் தெலுங்குதேசம், காங்கிரஸ், பாஜக, ஜனசேனா ஆகியவை உள்ளன.

 Andhra Elections: Congress begins receiving applications with Donations

ஆந்திரா நிலவரம்: லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் உள்ள மொத்தம் 25 தொகுதிகளில் 22-க்கும் மேல் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்தான் கைப்பற்றும் என்கின்றன பெரும்பாலான தேர்தல் கருத்து கணிப்புகள். அதே நேரத்தில் 175 தொகுதிகளைக் கொண்ட ஆந்திரா சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை ஜெகன் மோகன் ரெட்டி தக்க வைப்பாரா? என்பதில் முரண்பாடான முடிவுகளை கருத்து கணிப்புகள் வெளியிட்டு வருகின்றன.

 Andhra Elections: Congress begins receiving applications with Donations

ஒய்.எஸ்.ஷர்மிளா வருகை: தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சிக்கு எதிரிகளே இல்லை என்கிற நிலைமை இருந்தது. ஆனால் கர்நாடகா தேர்தலின் தாக்கத்தால் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி பீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழுந்து ஆட்சியையே கைப்பற்றியது. இந்த தாக்கம் ஆந்திராவிலும் எதிரொலிக்கும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. அதற்கேற்ப ஆந்திரா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளாவை அண்மையில் காங்கிரஸ் நியமித்தது. இது அம்மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அத்துடன் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸின் அதிருப்தியாளர்கள் அலை அலையாக ஒய்.எஸ்.ஷர்மிளா தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் இணையவும் தொடங்கி உள்ளனர்.

 Andhra Elections: Congress begins receiving applications with Donations

எவ்வளவு கட்டணம்?: இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அதிரடியாக தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து மனுக்களை பெற அறிவிப்பு வெளியிட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர் (பொது தொகுதி) ரூ25,000 நன்கொடை தர வேண்டும்; தனி தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ரூ 15,000 நன்கொடை தர வேண்டும்; சட்டசபை தேர்தலில் பொதுத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ரூ10,000 நன்கொடை தர வேண்டும். தனித் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ரூ5,000 நன்கொடை தர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்பி அறிவித்து விண்ணப்ப மனுக்களையும் விநியோகிக்க தொடங்கிவிட்டார். இது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரை மேலும் உற்சாகப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 Andhra Elections: Congress begins receiving applications with Donations
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+