ஆந்திரா: ஜெகனைவிட ஸ்பீடு காங்கிரஸ்..தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவுக்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா?
அமராவதி: ஆந்திரா சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுவேகமாக களமிறங்கிவிட்டது. ஆந்திரா சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கட்டணங்களை அம்மாநில மேலிடப் பொறுப்பாளரான தமிழ்நாட்டை சேர்ந்த எம்பி மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார்.
ஆந்திரா சட்டசபை மற்றும் லோக்சபாவுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திராவில் தற்போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திரா தேர்தல் களத்தில் தெலுங்குதேசம், காங்கிரஸ், பாஜக, ஜனசேனா ஆகியவை உள்ளன.

ஆந்திரா நிலவரம்: லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் உள்ள மொத்தம் 25 தொகுதிகளில் 22-க்கும் மேல் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்தான் கைப்பற்றும் என்கின்றன பெரும்பாலான தேர்தல் கருத்து கணிப்புகள். அதே நேரத்தில் 175 தொகுதிகளைக் கொண்ட ஆந்திரா சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை ஜெகன் மோகன் ரெட்டி தக்க வைப்பாரா? என்பதில் முரண்பாடான முடிவுகளை கருத்து கணிப்புகள் வெளியிட்டு வருகின்றன.

ஒய்.எஸ்.ஷர்மிளா வருகை: தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சிக்கு எதிரிகளே இல்லை என்கிற நிலைமை இருந்தது. ஆனால் கர்நாடகா தேர்தலின் தாக்கத்தால் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி பீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழுந்து ஆட்சியையே கைப்பற்றியது. இந்த தாக்கம் ஆந்திராவிலும் எதிரொலிக்கும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. அதற்கேற்ப ஆந்திரா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளாவை அண்மையில் காங்கிரஸ் நியமித்தது. இது அம்மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அத்துடன் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸின் அதிருப்தியாளர்கள் அலை அலையாக ஒய்.எஸ்.ஷர்மிளா தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் இணையவும் தொடங்கி உள்ளனர்.

எவ்வளவு கட்டணம்?: இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அதிரடியாக தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து மனுக்களை பெற அறிவிப்பு வெளியிட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர் (பொது தொகுதி) ரூ25,000 நன்கொடை தர வேண்டும்; தனி தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ரூ 15,000 நன்கொடை தர வேண்டும்; சட்டசபை தேர்தலில் பொதுத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ரூ10,000 நன்கொடை தர வேண்டும். தனித் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ரூ5,000 நன்கொடை தர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்பி அறிவித்து விண்ணப்ப மனுக்களையும் விநியோகிக்க தொடங்கிவிட்டார். இது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரை மேலும் உற்சாகப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

-
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி பதவியிலிருந்து ஹசீனா சையத் நீக்கம் -
Praveen: காங்கிரஸ் தலைமை அனுமதியுடனே விஜய்யை சந்தித்தேன்! வெடிகுண்டு வீசிய பிரவீன் சக்கரவர்த்தி! -
காங்கிரஸ் கட்சியில் இருந்து ஹசீனா சையத் விலகல்! கார்கே, செல்வப்பெருந்தகை மீது ஊழல் குற்றச்சாட்டு -
'சைலண்ட்' வாக்குகள்! இனி மாநாடுகள் போட்டு பயனில்லை.. கேரளாவின் தலையெழுத்தை தீர்மானிக்க போவதே இதுதான் -
தேர்தலுக்கு முன்பே அதிமுக வசமாகும் கோவையின் 2 தொகுதிகள்? பரிதாப நிலையில் காங்கிரஸ்.. என்ன நடக்கிறது? -
தூக்கியடிக்கப்படும் செல்வப்பெருந்தகை.. ராகுல் காந்தி பெரிய முடிவு? கையில் லிஸ்ட்? அடுத்த தலை யார்? -
4,379 ஓட்டு ஷாக்! விஜய பிரபாகரன் அப்போ அப்படி பேசிட்டு.. விருதுநகரில் நடந்த அந்த ரகசிய சமரசம் என்ன -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன












Click it and Unblock the Notifications