மின்னணு பரிவர்த்தனைக்கு ஏழைகளுக்கு இலவச செல்போன் - ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு
நாடு முழுவதும் பணமில்லா பரிவர்த்தனை செய்ய வசதியாக ஏழைகளுக்கு இலவச செல்போன் அளிக்க ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.
விஜயவாடா: பணமில்லா பரிவர்த்தனை செய்ய வசதியாக ஆந்திராவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மக்களுக்கு இலவச செல்போன் வழங்கப் போவதாக முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பால் நாடு முழுவதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்னை குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், பிரச்னை தீரும்வரை தொடர்ச்சியாக நிலைமையை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அப்போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள், ஆந்திராவுக்கு நவம்பர் 28ம் தேதி கூடுதலாக ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய ரூபாய் நோட்டுகள் வர உள்ளது. இதில் ரூ.60 கோடி மதிப்பிலான நோட்டுகள் சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் என்று தெரிவித்தனர்.

மின்னணு பணபரிமாற்றம்
இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், ஆந்திரா முழுவதும் பணம் இல்லாமல் பரிவர்த்தனை செய்யும் வசதியை அமல்படுத்த வேண்டும் என்றார். ஏழை, எளிய மக்களும் பழைய ரூபாய் நோட்டு விவகாரம் போன்று இனிமேலும் அவதிப்படாமல் இருக்க பணமில்லா பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

காகிதமில்லா பணபரிமாற்றம்
செய்தியாளர்களிடம் பேசிய அவர், காகிதமில்லா பணபரிமாற்றத்துக்கு குறைந்தபட்சம் செல்போன் தேவை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால், இந்த புதிய திட்டம் குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார். பழைய நோட்டுக்கள் விவகாரத்தில் ஏழைகள் அவதிப்படாமல் இருக்க பணம் இல்லாமல் மின்னனு முறையில் பரிவர்த்தனை செய்ய வேண்டும். அதற்கு வசதியாக ஏழை மக்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும் என்றும் கூறினார்.

மாநில முதல்வர்கள் நடவடிக்கை
பணத்தட்டுப்பாடு பிரச்சினையால் மக்கள் நாடு முழுவதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அந்தந்த மாநில முதல்வர்கள், இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பிரச்சினை தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் இலவச செல்போன்
தமிழக மக்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும் என்று ஏற்கனவே ஜெயலலிதா அறிவித்துள்ளார். இப்போது மின்னணு பண பரிமாற்றத்திற்கு மக்கள் மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சந்திரபாபு நாயுடு போல முதல்வர் ஜெயலலிதாவும் இலவச செல்போன் வழங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications