கடைசியாக உன்னை பார்க்கணும்.. பெண்ணை நம்ப வைத்து கழுத்தை அறுத்த இளைஞன்.. தர்ம அடி
விஜயவாடா: ஆந்திர மாநிலம் கடப்பா அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்து அறுத்து இளைஞன் கொலை செய்துள்ளான். கிராம மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கடைசியாக ஒரு முறை உன்னை பார்க்க வேண்டும் என்று கூறி உருக்கமாக அழைத்து நம்ப வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் சரண் என்ற அந்த இளைஞர். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பட்வேலு மண்டலம் சென்னூர்ராஜு பள்ளி கிராமத்தில் வசிப்பர் சரண். இவர் தனது ஊரின் அருகே உள்ள சிந்தலசெருவு கிராமத்தை சேர்ந்த சிரிஷா என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்திருக்கிறார்.

நேரில் வந்த சிரிஷா
ஆனால் சிரிஷா சரணின் காதலை ஏற்க மறுத்து வந்துள்ளார். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த சரண். சிரிஷாவின் சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார். காதலை ஏற்காவிட்டாலும் பரவாயில்லை கடைசியாக உன்னிடம் ஒருமுறை பேச வேண்டும் என்று சிரிஷாவை கெஞ்சி அழைத்துள்ளார்.

அறுத்தான்
அதில் மனம் இறங்கிய சிரிஷா சரணை சந்திக்க வந்திருக்கிறார். அப்போது திடீரென சரண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் பலமாக அறுத்துள்ளான். இதனால் அலறி துடித்த சிரிஷா ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

சோகம்
அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள் சரணை பிடித்து தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.. அதேநேரம் கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்த திரிஷாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர் கூறினர். இதனை கேட்டு கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

போலீசார் விசாரணை
இதனிடையே காதலை ஏற்க மறுத்த பெண்ணை கொலை செய்த சரண் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் காயங்களுடன் இருந்த சரணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications