அங்கன்வாடியை ஆய்வு செய்ய குடித்துவிட்டு வந்த அதிகாரி கைது
கொழிஞ்சாம்பாறை: கேரளாவில் அங்கன்வாடியை ஆய்வு செய்ய குடிபோதையில் வந்த அதிகாரியால் மக்கள் கொதிப்படைந்தனர்.அவரை போலீஸிலும் ஒப்படைத்தனர்.
கேரள மாநிலம் மறையூர் அருகே உள்ளது காந்தலூர் கிராமம். இந்த பஞ்சாயத்து பகுதியில் உள்ள பயஸ்நகர் என்ற இடத்தில் அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது.
இந்த அங்கன்வாடியை ஆய்வு செய்யவும் ஊழியர்கள் சரியாக பணிபுரிகிறார்களா என்பதை ஆராய தேவிகுளம் சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அதிகாரி பாபுராஜ் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
சம்பவத்தன்று அவர் அந்த அங்கன்வாடியை ஆய்வு செய்ய வருவதாக இருந்தது. சற்று தாமதமாக வந்த அவரது நடையில் மாற்றங்கள் தெரிந்தது. மது போதையில் இருந்த அவர் தள்ளாடியபடி அங்குவந்தார். திடீரென அவர் அங்கன்வாடி குழந்தைகளை வெளியே செல்லுமாறு விரட்டியடித்தார்.
பின்னர் அங்கு கிடந்த கட்டிலில் கம்பளி போர்வையை விரித்துபடுத்து தூங்க ஆரம்பித்தார். இதைப் பார்த்து அங்கன்வாடி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பான தகவல் ஊர் பொதுமக்களிடம் பரவியது. இதைத் தொடர்ந்து அங்கன்வாடியில் கூடிய பொதுமக்கள் அதிகாரியை எழுப்பி பார்த்தனர். ஆனால் முடியவில்லை. இதனால், போதையில் இருந்த அதிகாரியை பற்றி மறையூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போதையில் இருந்த பாபுராஜை மறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பாபுராஜுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. இதில் அவர் மதுபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து பாபுராஜ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications