அமோக விளைச்சலைப் பெற விவசாயிகளுக்கு இலவச ஐ-பேடு... ஆந்திர முதல்வர் அதிரடி
நகரி: ஆந்திராவில் விவசாய உற்பத்தியைப் பெருக்கும் வகையில் விவசாயிகள் அனைவருக்கும் இலவச ஐ-பேடு வழங்கப் படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
நேற்று விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளைச்ச் சந்தித்துப் பேசினார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. அப்போது அவர் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கான அரசின் உதவிகள் குறித்துப் பேசினார்.
மேலும், விவசாய உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கைகள் குறித்து அப்போது அவர் கூறியதாவது:-

இலவச ஐ-பேடு...
ஆந்திராவில் விவசாயத்தை பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் அனைவருக்கும் ஐ-பேடு என்ற சாதனம் இலவசமாக வழங்கப்படும்.

விஞ்ஞானிகள் கருத்து...
எல்லோருக்கும் உணவு, வேலை வாய்ப்பு, முன்னேற்றம் பொது நலம் பற்றி விஞ்ஞானிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அதிகாரிகளின் கருத்துகள் கேட்கப்படும்.

உடனடி தகவல்கள்...
மேலும் நிலத்தின் காரத்தன்மை பற்றி ஆய்வு செய்து எந்த நிலத்தில் எந்த பயிர் செய்தால் அமோக விளைச்சலை பெறலாம், தரமான விதைகளை தேர்ந்தெடுப்பது எப்படி? விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களை எப்படி விற்பனைக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் ‘ஐ-பேடு' சாதனத்தில் விவசாயிகளுக்கு அனுப்பப்படும்.

அமோக விளைச்சல்...
இதன் மூலம் விவசாயிகள் நிலத்தின் தன்மைக்கேற்ப பயிரிட்டு நல்ல விளைச்சலை பெறலாம்.

குறைந்து வரும் விவசாய நிலம்...
கடந்த 10 ஆண்டுகள் மத்திய அரசு மற்றும் மாநில அரசால் விவசாயிகள் பல்வேறு சோதனைகளை சந்தித்து விட்டனர். விவசாயம் செய்யும் நிலத்தின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது.

பின்னடைவு...
விவசாயத்தை பெருக்க பட்ஜெட்டில் நிதி ஏதும் ஒதுக்கவில்லை. விவசாய ரீதியாக இந்தியா பின்னடைவை சந்தித்து வருகிறது. அதிலும் ஆந்திரா அதிக பின்னடையை சந்தித்துள்ளது. விவசாயம் செய்யும் செலவு அதிகம். ஆனால் உற்பத்தி குறைவு.

விவசாயிகள் பலனடைவர்...
கோலவரம் நதிநீர் தேக்கம் அமைக்க மத்திய அரசு தடையை நீக்கி உள்ளது. கோலவரம் நதிநீர் தேக்கம் அமைக்கப்பட்டால் விசாகபட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பலன் அடைவார்கள்.

ஜிப்சம் சத்துக்கள்...
விவசாய நிலங்களை வளம் கொழிக்க வைக்க ஜிப்சம் உள்ளிட்ட சத்துக்களை இட வேண்டி உள்ளது. இதற்காக வருடத்துக்கு ரூ.500 கோடி செலவிட உள்ளோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications