முட்டாள்கள் தினமே மோடிக்காகத்தான் கொண்டாடப்படுகிறது.. ஜிக்னேஷ் மேவானி கிண்டல்!
முட்டாள்கள் தினமே இந்திய பிரதமர் மோடிக்காகத்தான் கொண்டாடப்படுகிறது என்று குஜராத் சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அஹமதாபாத்: முட்டாள்கள் தினமே இந்திய பிரதமர் மோடிக்காகத்தான் கொண்டாடப்படுகிறது என்று குஜராத் சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும், ஜிக்னேஷ் மேவானியின் வெற்றி அங்கு புதிய எழுச்சியை உருவாக்கி இருக்கிறது. இவர் அடிக்கடி மோடியை கலாய்த்து டிவிட்டரில் எழுதுவதுண்டு. அதேபோல் தற்போது முட்டாள்கள் தினத்திற்காக அவர் டிவிட் செய்துள்ளார்.
அதில் ''நரேந்திர மோடி இந்த முட்டாள்கள் தினத்தை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றுவிட்டார். சரியாக சொல்ல வேண்டும் என்றால், இந்த நாளே அவருக்கானதுதான். அவர் கொஞ்சம் கூட உறுத்தாமல் சொல்லும் பொய்கள் காரணமாக கண்டிப்பாக வரலாற்றில் இடம்பிடிப்பார். அவருக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றுள்ளார்.
Narendra modi has taken April fool day to new heights. Actually this day is meant only for him. He will undoubtedly go to history for the jumlas he keeps producing without feeling embarrassment. Our best wishes are always with you, Narendra bhai.
— Jignesh Mevani (@jigneshmevani80) April 1, 2018
இதேபோல் இன்னொரு டிவிட்டில் ''சர்வதேச முட்டாள்கள் தினத்தில் மனித இனம் உலகிற்கு கொடுக்க கூடிய மிகசிறந்த பரிசு கண்டிப்பாக மோடியாக மட்டுமே இருப்பார்'' என்று கிண்டல் செய்து இருக்கிறார்.
Narendra Modi is the best ever gift which mankind can give on international April fool day.
— Jignesh Mevani (@jigneshmevani80) April 1, 2018