மிசோரமில் இந்திய பாதுகாப்பு படையினரிடம் தஞ்சம் அடைந்த 151 மியான்மர் ராணுவ வீரர்கள்!
ஐஸ்வால்: மியான்மர் நாட்டு ராணுவத்தில் இருந்து தப்பி ஓடி வந்த 151 வீரர்கள் மிசோரம் மாநிலத்தில் இந்திய பாதுகாப்பு படையினரிடம் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுத குழுக்கள் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய எல்லையில் உள்ள மியான்மர் பகுதிகளை இந்த ஆயுதக் குழுக்கள் கைப்பற்றி வருகின்றனர். இதனையடுத்து மியான்மர் ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் நுழைந்து இந்திய பாதுகாப்பு படையினரிடம் தஞ்சம் அடைவது தொடருகிறது.

மிசோரம் எல்லையில் 2 குழுக்களாக மியான்மர் ராணுவத்தினர் இந்திய படையினரிடம் டிசம்பர் 29-ந் தேதி சரணடைந்தனர். முதலில் 83 பேர் கொண்ட மியான்மர் ராணுவ குழு சரணமடைந்தது. பின்னர் மேலும் 68 பேருடன் மற்றொரு மியான்மர் ராணுவ குழுவும் சரணடைந்தது. அதே நேரத்தில் இந்தியா- மியான்மர் எல்லை வனப்பகுதியில் மேலும் பல மியான்மர் ராணுவத்தில் தலைமறைவாக பதுங்கி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சரணடைந்த அனைத்து மியான்மர் ராணுவ வீரர்களும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சரணடைந்த மியான்மர் இவர்கள் அனைவரும் அடுத்த ஓரிரு நாட்களில் முறைப்படி மியான்மர் ராணுவ வசம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
இது தொடர்பாக அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், சரணடைந்த மியான்மர் ராணுவத்தினர் சிலர் படுகாயமடைந்த நிலையில் உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மியான்மர் எல்லையில் உள்ள Lawngtlai மாவட்டத்தில்தான் மியான்மர் ராணுவத்தினர் சரணடைந்துள்ளனர். கடந்த காலங்களில் சரணடைந்த மியான்மர் ராணுவ வீரர்கள் விமானம் மூலமாகவும் மணிப்பூர் மோரே நகரம் தரை மார்க்கமாகவும் அந்நாட்டு ராணுவத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர். அதேபோல தஞ்சமடைந்த 151 ராணுவத்தினரும் மியான்மர் ராணுவத்திடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படுவர் என்றனர்.
கடந்த நவம்பர் மாதமும் இந்தியாவுக்குள் 75 மியான்மர் ராணுவ வீரர்கள் நுழைந்து தஞ்சமடைந்தனர். முதலில் மிசோரம் போலீசாரிடம் சரணடைந்த 75 பேரும் பின்னர் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications